Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அகமதாபாத் விமான விபத்துக்கு காரணம் இதுதான்.. வெளியானது முதற்கட்ட விசாரணை அறிக்கை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 260 பேரின் உயிரை கொன்ற அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து உலகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தற்போது விசாரணை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி விமானம் டேக் ஆஃப் ஆன பின்னர், என்ஜின்களுக்கு செல்லும் எரிபொருள் ஆஃப் செய்யப்பட்டிருப்பதாக தெரிய வந்திருக்கிறது.

விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (ஏஏஐபி) வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, "விமானம் 08:08:42 UTC மணியளவில் மணிக்கு 180 நாட்ஸ் IAS என்ற அதிகபட்ச பதிவு செய்யப்பட்ட வேகத்தை அடைந்தது. உடனடியாக, எஞ்சின் 1 மற்றும் எஞ்சின் 2 எரிபொருள் கட்ஆஃப் சுவிட்சுகள் ஒரு வினாடி இடைவெளியில் 'RUN' நிலையிலிருந்து 'CUTOFF' நிலைக்கு மாறின. என்ஜின்களுக்கு எரிபொருள் விநியோகம் துண்டிக்கப்பட்டதால், எஞ்சின் N1 மற்றும் N2 அவற்றின் டேக்-ஆஃப் மதிப்புகளிலிருந்து குறையத் தொடங்கின.

Ahmedabad Air India plane

காக்பிட் குரல் பதிவில், ஒரு விமானி மற்றொரு விமானியிடம் ஏன் கட்ஆஃப் செய்தார் என்று கேட்கிறார். அதற்கு மற்றொரு விமானி தான் அதைச் செய்யவில்லை என்று பதிலளித்தார்.

விமான நிலையத்திலிருந்து பெறப்பட்ட CCTV காட்சிகளில், விமானம் புறப்பட்ட உடனேயே (ஆரம்பக்கட்ட டேக் ஆஃப் போது) ராம் ஏர் டர்பைன் (RAT) விரிவடைந்தது தெரியவந்துள்ளது. விமானத்தின் பாதைக்கு அருகில் குறிப்பிடத்தக்க பறவைகளின் நடமாட்டம் எதுவும் காணப்படவில்லை. விமானம் விமான நிலையத்தின் சுற்றுச்சுவரைக் கடக்கும் முன்பே உயரத்தை இழக்கத் தொடங்கியது" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+