மற்ற தடுப்பூசிகளை போல கொரோனா தடுப்பூசியும் இந்திய சந்தையில் 2022-இல் கிடைக்கும்.. எய்ம்ஸ் மருத்துவர்
டெல்லி: 2022-ஆம் ஆண்டு வரை கொரோனா வைரஸ் இந்திய சந்தைகளில் எளிதாக கிடைக்காது என எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 8,519,495 ஆக உள்ளது. இங்கு இதுவரை 126,235 பேர் இறந்துள்ளனர். கொரோனாவை தடுக்க தடுப்பூசியை சீனா, அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் மும்முரம் காட்டி வருகின்றன.
இந்த நிலையில் இதுகுறித்து எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநரும் கொரோனா மேலாண்மை குறித்த தேசிய அதிரடி படையின் உறுப்பினர் டாக்டர் ரன்தீப் குலேரியா கூறுகையில் இந்திய சந்தைகளில் கோவிட் 19 க்கான தடுப்பூசி கிடைக்க ஒரு ஆண்டுக்கு மேலாகும்.

மக்கள்தொகை
நம் இந்தியாவில் மக்கள்தொகை அதிகமாக உள்ளது. மற்ற காய்ச்சல்களுக்கான தடுப்பூசி எப்படி இந்திய சந்தைகளில் கிடைக்கிறதோ அது போல் கொரோனா தடுப்பூசியும் கிடைக்க சில காலம் பிடிக்கும்.

தடுப்பூசி
இந்தியாவின் தொலைதூர பகுதிகளில் தடுப்பூசியை விநியோகம் செய்ய போதுமான சிரிஞ்சுகள், ஊசிகள் ஆகியவை கிடைப்பதில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க வேண்டியது அவசியமாகும். ஏற்கெனவே உள்ள தடுப்பூசியை காட்டிலும் வலிமை வாய்ந்ததாக இருக்க வேண்டும்.

பள்ளிகள்
அதன் பிறகு யாருகெல்லாம் தடுப்பூசி ஏ கொடுக்க வேண்டும்? யாருக்கல்லாம் தடுப்பூசி பி கொடுக்க வேண்டும்? இது போன்று ஏராளமான முடிவுகளை நாம் எடுக்க வேண்டியது உள்ளது என்றார். பள்ளிகள், பஞ்சாயத்து கட்டடங்கள், அங்கன்வாடி மையங்கள், சுகாதார மையங்கள் ஆகியவை தடுப்பூசி வழங்கப்படும் மையங்களாக செயல்படும்.

முறைகேடு
ஒரு நபருக்கு ரூ 500 வீதம் கொரோனா தடுப்பூசிக்காக மத்திய அரசு ரூ 50 ஆயிரம் கோடியை ஒதுக்கியுள்ளது. கொரோனா களப் பணியாளர்களுக்கு முதலில் தடுப்பூசி செலுத்தப்படும். அதன் பிறகு பொதுமக்களுக்கு செலுத்தப்படும். இதில் முறைகேட்டை தடுக்க ஆதார் எண்ணை வைத்து கணக்கெடுக்கும் பணி நடைபெறும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications