ஆக்சிஜன் தட்டுப்பாடு : டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு தற்காலிகமாக மூடல்
ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
டெல்லி: கொரோனா நோயாளிகள் அதிகரித்துள்ள நிலையில் புதிய ஆக்ஸிஜன் குழாய்கள் அமைப்பதற்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டது.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக் குறை ஏற்படாமல் தடுக்க புதிய ஆக்ஸிஜன் குழாய்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்றது. இதன் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் ஐசியு சிறிது நேரம் மூடப்பட்டது. புதிய ஆக்சிஜன் குழாய்கள் அமைக்கும் பணிகள் முடிந்த பிறகு, அவசர சிகிச்சை பிரிவு மீண்டும் திறக்கப்பட்டது.
தலைநகர் டெல்லியில் கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் சென்றுள்ளது. பெரும்பாலான மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பிவிட்டதால், கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் மருத்துவ ஆக்ஸிஜனின் தேவை மிக அதிகமாக இருக்கிறது. ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் புதிய நோயாளிகளை சேர்க்க மறுக்கின்றனர். இதனால் பலரும் உயிருக்கு போராடி வருகின்றனர்.
தற்போது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக் குறையின் காரணமாக அவசர சிகிச்சை பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் புதிய நோயாளிகள் யாரையும் அனுமதிக்க மறுப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
சரோஜ் மருத்துவமனையும் புதிய நோயாளிகளை அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளது. எங்களிடம் போதிய ஆக்சிஜன் இல்லாததால், மருத்துவமனையில் நோயாளிகளை அனுமதிப்பதை நிறுத்திவிட்டோம். சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளையும் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றி வருகிறோம் என்று அந்த மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
இதனிடையே 480 மெட்ரிக் டன் ஆக்சிஜனை மத்திய அரசு தராவிட்டால், டெல்லியில் நிலைமை முற்றிலும் சீரழிந்துவிடும். ஆக்சிஜன் வழங்குவதற்கான உறுதியை மத்திய அரசு எழுத்துப் பூர்வமாக தரவேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications