அதிவேகமாக பரவும் கருப்பு பூஞ்சை நோய்.. சர்க்கரை நோயாளிகள் ஜாக்கிரதை.. எய்ம்ஸ் மருத்துவர் எச்சரிக்கை
டெல்லி: கொரோனா நோயாளிகளை அதிகம் தாக்கும் Mucormycosis எனப்படும் கருப்பு பூஞ்சை வேகமாகப் பரவிவருவதால் நீரிழிவு நோயாளிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என எய்ம்ஸ் மருத்துவர் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலின் 2ஆம் அலை நாட்டில் தற்போதுதான் மெல்லக் குறைந்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில், நாட்டிலுள்ள சில மாநிலங்களில் மியூகோர்மைகோசிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பாக டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் இதன் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனால் கருப்பு பூஞ்சை பாதிப்பை ராஜஸ்தான் பெருந்தொற்றாக் அறிவித்துள்ளது
இந்நிலையில் இந்த நோய் பற்றி எய்ம்ஸ் மருத்துவர் பேராசிரியர் எம்.வி.பத்ம ஸ்ரீவஸ்தவா கூறுகையில், "எய்ம்ஸ் மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று இலக்கை தொட்டுள்ளது. தினசரி குறைந்தது 20 கருப்பு பூஞ்சை நோயாளிகள் இங்கு வருகின்றனர். அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கத் தனி வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், இவை கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களை அதிகம் குறி வைத்துத் தாக்குகிறது. கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சையின் போது அளிக்கப்படும் ஸ்ட்ரீயாடு மருந்துகள் மருந்துகள் காரணமாக அவர்களின் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாகிறது. இதனால் அவர்களுக்குக் கருப்பு பூஞ்சை பாதிப்பு எளிதாக ஏற்படுத்துகிறது.
குறிப்பாக, நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள் கருப்பு பூஞ்சை நோயால் மிக எளிதாகப் பாதிக்கப்படலாம். எனவே, அவர்கள் தங்கள் சர்க்கரை அளவை மிகத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்" என்று அவர் குறிப்பிட்டார்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications