கோவாக்சின் மருந்து மனிதர்களுக்கு சோதனை.. உங்களுக்கு விருப்பமா.. டெல்லி எய்ம்ஸ் முக்கிய அறிவிப்பு
டெல்லி: கோவாக்சின் தடுப்பு மருந்து சோதனைக்கு இன்று முதல் தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறிவித்துள்ளது.
Recommended Video

கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல்வேறு நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. பல்வேறு நாடுகளில் உள்ள மருந்து நிறுவனங்கள் நடத்தி வரும் சோதனைகள் இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளன.
இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா, சீனா,ஜெர்மனி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வறு நாடுகள் பல சோதனைகளுக்கு பின்னர் இறுதியாக மனிதர்களுக்கு கொடுத்து சோதித்து வருகின்றன.

மனிதர்களுக்கு சோதனை
அந்த வகையில் இந்தியாவும் கோவாக்சின் மருந்தை ஆய்வக சோதனைகள், விலங்குகள் மீதான சோதனைகள் முடிந்த நிலையில் மனிதர்கள் மீது சோதிக்க தொடங்க உள்ளது. இந்த சோதனையில் வெற்றி கிடைத்த பின்னரே நோயாளிகளுக்கு வழங்கப்படும்.

பாரத்பயோடெக் நிறுவனம்
புனேவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பாரத்பயோடெக் மருந்நு நிறுவனம் தான் கொரோனாவிற்கான தடுப்பு மருந்தான கோவாக்சின் என்ற மருந்தை கண்டுபிடித்துள்ளது. பலகட்ட ஆராய்ச்சிகளை நடத்தி முடித்துள்ளது. மனிதனுக்கு செலுத்தி ஆய்வு செய்யும் சோதனை தொடங்கப்பட உள்ளது. இந்தியாவில் கோவாக்சின் மருந்து இரண்டு கட்டமாக மனிதர்களுக்கு செலுத்தி சோதிக்கப்பட உள்ளது. இந்த மருந்து இந்தியாவில் டெல்லி, ஹைதரபாத், சென்னை உள்பட 12 நகரங்களில் சோதிக்கப்பட உள்ளது.

இன்று முதல் பதிவு
இந்நிலையில் கோவாக்சின் தடுப்பு மருந்து சோதனைக்கு இன்று முதல் தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டுவார்கள் என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறிவித்துள்ளது.
கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் நபர்கள் முழு உடல் தகுதியுடன், எந்த வித நோயும் இல்லாமல் இருத்தல் வேண்டும். அவர்கள் வயது 18 வயது முதல் 55 வயது வரை இருக்க வேண்டும் என்றும் அந்த நபர்களுக்கான பதிவு இன்று முதல் தொடங்கும் என்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர் சஞ்செய் ராய் தெரிவித்துள்ளார்.

தொலைப்பேசி எண் அறிவிப்பு
சோதனைக்கு விருப்பம் தெரிவிக்கும் நபர்கள் [email protected] என்ற மின்னஞ்சலுக்கு மூலம் பதிவு செய்துகொள்ளலாம். அல்லது 7428847499 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என்றும் மருத்துவர் சஞ்செய் ராய் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications