மத்திய அரசிடம் பணமில்லை.. அதனால் ஏர் இந்தியாவை விற்கின்றனர்- கபில் சிபல்
டெல்லி: மத்திய அரசிடம் போதுமான நிதி இல்லாத காரணத்தால்தான் ஏர் இந்தியா நிறுவனத்தின் 100% பங்குகளை மத்திய அரசு விற்பனை செய்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில்சிபல் விமர்சித்துள்ளார்.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் 100% பங்குகள் மற்றும் ஏர் இந்தியா- சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனங்களை உள்ளடக்கிய ஏசாட்ஸ்-ன் 50% பங்குகளை மத்திய அரசு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. அதேநேரத்தில் ஏர் இந்தியாவின் பல்வேறு துணை நிறுவனங்களின் பங்குகள் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்படவில்லை.

ஏர் இந்தியாவின் பங்குகளை வாங்குவதற்கான கடைசி தேதி மார்ச் 17-ந் தேதி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இம்முடிவானது தேசவிரோதம் என்று பாஜகவின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் மத்திய அரசின் இம்முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாகவும் சுப்பிரமணியன் சுவாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். மத்திய பாஜக அரசுக்கு எதிராக பாஜக எம்.பி.யே போர்க்கொடி தூக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே மத்திய அரசின் இம்முடிவை காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக கபில் சிபல் டெல்லியில் செய்தியாளர்களிடம் இன்று கூறியுள்ளதாவது:
மத்திய அரசிடம் போதுமான பணம் கையிருப்பில் இல்லை. அதனால்தான் இது போன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்கிறது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5%க்கும் கீழே சென்றுவிட்டது. தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பல கோடி ரூபாய் நிலுவைத் தொகை உள்ளது.
இதனால்தான் வேறுவழியே இல்லாமல் மதிப்பு வாய்ந்த நாட்டின் சொத்துகளை விற்பனை செய்கிற வழியை மத்திய அரசு தேர்ந்தெடுத்துள்ளது. இவ்வாறு கபில் சிபல் கூறியுள்ளார்.
-
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications