இது மிக மோசமான அறிகுறி.. இந்திய பொருளாதாரம் பற்றி எச்சரிக்கும் நோபல் வின்னர் அபிஜித் பானர்ஜி!
இந்தியாவின் பொருளாதாரம் தற்போது நிலையாக இல்லை, மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்று நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி தெரிவித்துள்ளார்.
Recommended Video
டெல்லி: இந்தியாவின் பொருளாதாரம் தற்போது நிலையாக இல்லை, மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்று நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி தெரிவித்துள்ளார்.
2019ம் வருடத்திற்கான நோபல் பரிசுகள் வரிசையாக அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில் அமெரிக்கா வாழ் இந்தியரான அபிஜித் பானர்ஜி இந்த நோபல் பரிசை பெற்று இருக்கிறார்.இவருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
அவரின் மனைவி எஸ்தர் டூஃப்லோ மற்றும் மெக்கேல் கிரெமர் ஆகியோருக்கு கூட்டாக பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அபிஜித் பானர்ஜிதான் தற்போது இந்திய பொருளாதாரம் குறித்து பேட்டி அளித்துள்ளார்.

மோசம்
அபிஜித் பானர்ஜி அளித்துள்ள பேட்டியில், இந்தியாவின் பொருளாதாரம் தற்போது நிலையாக இல்லை. மிகவும் மோசமான நிலையில் அது உள்ளது. இதற்காக இப்போதே அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இப்போதே சரியான கொள்கை முடிவுகளை அரசு எடுக்க வேண்டும்.

இந்திய பொருளாதாரம்
இந்திய பொருளாதாரம் மிக மிக மோசமாக இருக்கிறது. இதை இவ்வளவு நாள் அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் தற்போது அரசே இதை ஏற்க தொடங்கி உள்ளது என்றுதான் கூற வேண்டும். இந்திய பொருளாதாரத்தின் எதிர்க்காலம் எப்படி இருக்கும் என்று பின்பும் யோசிக்கலாம்.

எதுவும் சரியில்லை
தற்போது இந்திய பொருளாதாரத்தில் எதுவும் சரியில்லை. இதை பற்றி கருத்து கூற எனக்கு முழு உரிமையா இருக்கிறது. மக்களிடம் வாங்கும் சக்தியே இப்போது குறைந்துவிட்டது. இது போன்ற விஷயங்கள் எப்போதாவதுதான் நடக்கும். இப்போது நடந்து வருகிறது. இது மிக மோசமான அறிகுறி.

எல்லாம் பொய்
தற்போது மத்திய அரசு சில புள்ளி விவரங்களை ஏற்றுக்கொள்வது கிடையாது. அரசுக்கு எதிராக வரும் புள்ளி விவரங்களை பொய் என்று கூறுகிறார்கள். ஆனால் அப்படி கிடையாது. இந்திய பொருளாதாரம் மோசமான நிலையில் இருப்பதை அரசு ஏற்க வேண்டும்.

அரசு ஏற்க வேண்டும்
அதை அரசு ஒப்புக்கொண்டு நடவடிக்கையில் இறங்க வேண்டும். அரசு மிக மோசமான நிதி பற்றாக்குறையில் இருக்கிறது. இப்போது தற்காலிக தேவையை பூர்த்தி செய்ய வேண்டுமானால் பணம் இருக்குமே தவிர எதிர்காலத்திற்கு இருக்காது, என்று அபிஜித் பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications