பாஜகவை எதிர்க்க அனைவரும் ஓரணியில் திரளனும்.. சோனியா காந்தியை சந்தித்த பின் லாலு பிரசாத் கருத்து
டெல்லி: ‛‛இந்தியாவில் இந்தியாவில் பாஜகவை எதிர்ப்பது என்பது காங்கிரஸ் இன்றி சாத்தியமில்லை. இதற்கு காங்கிரஸ் கூட்டணி அவசியம். இந்தியாவில் பாஜகவை எதிர்த்து போராடுவதில் காங்கிரஸ் கட்சி தான் முன்னணியில் உள்ளது. பாஜகவுக்கு எதிரான போராட்டத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே பக்கம் நின்று உறுதியான செயல்திட்டத்துடன் செயல்பட வேண்டும்'' என சோனியா காந்தியை சந்தித்த பிறகு ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறினார்.
இந்தியாவில் 2024ல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ள பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் தயாராகி வருகின்றன.
இந்நிலையில் பீகாரில் பாஜகவை கழற்றிவிட்டு லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதாதளம், காங்கிரஸ் கட்சியுடன் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் நிதிஷ் குமார் கூட்டணி அமைத்து மீண்டும் முதல்வரானார்.

சோனியாவுடன் சந்திப்பு
இந்நிலையில் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் பதவிக்கு நிதிஷ் குமார் போட்டியிட உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இதனை அவர் மறுத்துள்ளார். இருப்பினும் பாஜகவுக்கு எதிராக வலுவான அணி அமைக்க அவர் முடிவு செய்துள்ளார். இதுஒருபுறம் இருக்க பீகாரில் கூட்டணி ஆட்சி அமைந்த நிலையில் இன்று காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை நிதிஷ் குமார் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் டெல்லியில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு என்பது சுமார் ஒரு மணிநேரம் வரை நடந்தது.

எதிர்க்கட்சிகளை இணைக்க விவாதம்
இந்த சந்திப்பின்போது 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக செயல்படுவது தொடர்பான வியூகம் பற்றி விவாதித்ததாக சொல்லப்படுகிறது. இதுதவிர 2024ம் ஆண்டில் பாஜகவுக்கான எதிரான கொள்கையில் உள்ள கட்சிகளை ஓரணியில் திரட்டுவது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து மூன்று பேரும் கருத்து பரிமாற்றம் செய்துள்ளனர். இந்த சந்திப்புக்கு பிறகு சோனியா காந்தியின் வீட்டில் இருந்து பீகார் முதல்வர் நிதிஷ் குமார், லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் வெளியே வந்தனர். இருவரும் கைகள் கோர்த்து தலைக்கு மேலே உயர்த்தி போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர்.

லாலு பிரசாத் பேட்டி
அதன்பிறகு ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: 2024 நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் பாஜகவின் ஆட்சியை அகற்றி நாட்டை காப்பாற்ற வேண்டும் என சோனியா காந்தியிடம் கூறினோம். பீகாரில் பாஜகவை அகற்றியது போல் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என சோனியாவிடம் தெரிவித்தோம். காங்கிரஸ் கட்சியில் புதிய தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் மீண்டும் ஒருமுறை சந்திப்போம்.

அனைவரும் ஒன்றாக இணைய...
இந்தியாவில் பாஜகவை எதிர்ப்பது என்பது காங்கிரஸ் இன்றி சாத்தியமில்லை. இதற்கு காங்கிரஸ் கூட்டணி அவசியம். இந்தியாவில் பாஜகவை எதிர்த்து போராடுவதில் காங்கிரஸ் கட்சி தான் முன்னணியில் உள்ளது. பாஜகவுக்கு எதிரான போராட்டத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே பக்கம் நின்று உறுதியான செயல்திட்டத்துடன் செயல்படுவது பற்றி காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் முடிந்த பிறகு விவாதிக்கப்படும்'' என்றார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications