சீனர்கள் இந்தியாவில் நுழைய அதிரடி தடை.. அனைத்து விசாக்களும் ரத்து.. கொரானா பீதி!
Recommended Video
டெல்லி: சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 28 ஆயிரத்துக்கும்மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உலக நாடுகள் அனைத்துமே சீனர்களை தங்கள் நாட்டிற்குள் நுழைய தடை விதித்துள்ளன.
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 28 ஆயிரத்துக்கும்மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உலக நாடுகள் அனைத்துமே சீனர்களை தங்கள் நாட்டிற்குள் நுழைய தடை விதித்துள்ளன.

இந்நிலையில் இந்திய அரசும் தடை விதித்துள்ளது. பிப்ரவரி 5ம் தேதிக்கு முன்பு விசா பெற்ற சீனர்கள் இந்த உலகில் எந்த மூளையில் இருந்து வந்தாலும் இந்தியாவில் நுழைய அனுமதி இல்லை என குடியுரிமை துறை அதிகாரிகள் கூறினார்கள்.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 2020 ஜனவரி 15 அல்லது அதற்குப் பிறகு சீனாவுக்குச் சென்ற வெளிநாட்டவர்கள் எந்தவொரு விமானம், நிலம் அல்லது துறைமுகம் வழியாக இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை என வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஹாங்காங், மக்காவ் மற்றும் தைவான் ஆகிய பகுதிகளில் வசிக்கும் சீன பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடுகள் பொருந்தாது என்று இந்தியா அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications