அமேசான் மூலம் 10 லட்சம் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.. மத்திய அரசுக்கு ஜெஃப் பெஸோஸ் பதிலடி!
2025ல் இந்தியாவில் நாங்கள் 10 லட்சம் வேலை வாய்ப்பை உருவாக்கி இருப்போம் என்று அமேசான் நிறுவன அதிபர் ஜெஃப் பெஸோஸ் தெரிவித்துள்ளார்.
டெல்லி: 2025ல் இந்தியாவில் நாங்கள் 10 லட்சம் வேலை வாய்ப்பை உருவாக்கி இருப்போம் என்று அமேசான் நிறுவன அதிபர் ஜெஃப் பெஸோஸ் தெரிவித்துள்ளார்.
அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸோஸின் இந்திய வருகை தொடர் சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.உலகின் நம்பர் 1 பணக்காரர் ஜெஃப் பெஸோஸ். ஆனால் இந்தியா வந்த இவரை பிரதமர் மோடி சந்திக்கவில்லை. ஜெஃப் பெஸோஸுக்கு சொந்தமான வாஷிங்க்டன் போஸ்ட் செய்தி நிறுவனம் மோடிக்கு எதிராக கட்டுரை வெளியிடுவதுதான் இதற்கு காரணம் என்று புகார் வைக்கப்பட்டுள்ளது.
சவுதியின் முடி இளவரசர் முகமது பின் சல்மானும் இதேபோல் வாஷிங்க்டன் போஸ்ட் மீது கோபத்தில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சவுதியால் கொல்லப்பட்ட ஜமால் காசாக்கி வாஷிங்க்டன் போஸ்டில்தான் பணியாற்றி வந்தார்.

இந்தியா வருகை
இந்த நிலையில் இந்தியா வந்த ஜெஃப் பெஸோஸ், கடந்த புதன் கிழமை இந்தியாவில் 1 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்போவதாக அறிவித்தார். 10 மில்லியன் பேர் இதனால் பயன் அடைவார்கள். சிறு, குறு தொழில் இதனால் வளரும். இந்தியாவின் ஆன்லைன் வர்த்தகம் இதனால் புதிய உயரம் தொடும் என்று ஜெஃப் பெஸோஸ் குறிப்பிட்டார்.

ஆனால் என்ன
ஆனால் ஜெஃப் பெஸோஸின் இந்த அறிவிப்பை மத்திய அரசு சந்தோசமாக ஏற்கவில்லை. இது தொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், இந்த முதலீடு காரணமாக இந்தியாவிற்கு பெரிய பலன் கிடையாது. இதன் மூலம் இந்தியாவிற்கு ஜெஃப் பெஸோஸ் சேவை எதையும் செய்யவில்லை. இதனால் இந்தியாவிற்கு நஷ்டம் ஏற்பட கூட வாய்ப்புள்ளது என்று கூறினார்.

மிக மோசம்
இவரின் இந்த பேச்சு கார்ப்ரேட் நிறுவனங்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இவ்வளவு பெரிய முதலீட்டை ஈகோ காரணமாக இந்தியா இப்படி நடத்த கூடாது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் அமேசான் முதலீடு காரணமாக இந்தியாவில் 2025க்குள் 10 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று ஜெஃப் பெஸோஸ் தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்புகள்
பல்வேறு துறைகளில் இந்த வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். ஏற்கனவே அமேசான் மூலம் 7 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். 2013ல் இருந்து அமேசான் மூலம் இந்தியாவில் வேலை வாய்ப்பு அதிகரித்து வருகிறது. 2025ல் நாங்கள் 10 லட்சம் வேலைவாய்ப்பை உருவாக்கி இருப்போம், என்று ஜெஃப் பெஸோஸ் தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications