மருத்துவமனை ரெடியா? சீனாவில் வேகமெடுத்த நிமோனியா காய்ச்சல்.. மாநிலங்களுக்கு மத்திய அரசு பரபர கடிதம்
டெல்லி: சீனாவில் நிமோனியா காய்ச்சல் பரவல் என்பது அதிகரித்து வரும் நிலையில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் அனைத்து மாநில அரசுகளுக்கும் முக்கிய அறிவுரைகளை வழங்கி உள்ளார். மாநிலங்களில் மருத்துவமனைகளை தயார் நிலையில் வைப்பதோடு, மாத்திரை, மருந்து, ஆக்சிஜன் இருப்பை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட அறிவுரைகளை வழங்கி உள்ளார்.
அண்டை நாடான சீனாவில் தற்போது எச்9என்2 எனும் சுவாச பிரச்சனையை ஏற்படுத்தும் நிமோனியா வகை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக வடக்கு சீனாவில் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக குழந்தைகள் இந்த வகை காய்ச்சலால் எளிதாக தாக்கப்படுகின்றனர். இந்நிலையில் தான் எச்9என்2 வகை நிமோனியா காய்ச்சல் பரவல் குறித்து சீனாவை உன்னிப்பாக இந்தியா கவனித்து வருகிறது.
அதோடு இந்தியாவில் இந்த வகை பாதிப்பு இன்னும் கண்டறியப்படாத நிலையில் சீனாவில் இருந்து இங்கு பரவுவதை தடுக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையே தான் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் சார்பில் இன்று அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது
அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: சீனாவில் நிமோனியா வகை காய்ச்சல் பரவி வருகிறது. நமது நாட்டில் இந்த பாதிப்பு இன்னும் ஏற்படவில்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்பது தேவையான ஒன்றாகும். இதனால் மருத்துவமனை படுக்கைகள், மருந்துகள் மற்றும் காய்ச்சலுக்கான தடுப்பூசிகள், ஆக்ஸிஜன் இருப்பு, பாக்டீரியா உள்ளிட்ட நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்து, தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள், சோதனைக் கருவிகள் போன்ற மருத்துவ உள்கட்டமைப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு வெண்டிலேட்டர் செயல்பாட்டையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
மேலும் கோவிட் 19 தொடர்பாக இந்த ஆண்டு தொடக்கத்தில் திருத்தப்பட்ட கண்காணிப்பு யுக்திகளை அனைவரும் பின்பற்ற வேண்டும். இது இன்ஃப்ளூயன்ஸா போன்ற நோய் (ILI) மற்றும் சுவாச நோய்க்கிருமிகளின் (SARI) ஒருங்கிணைந்த கண்காணிப்பை அறிய உதவியாக இருக்கும். இந்த தரவுகள் IDSP-IHIP போர்ட்டலில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அதோடு குழந்தைகள், இளம் வயதினரை மாவட்ட வாரியாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சுவாசம் சார்ந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் மாதிரிகளை வைரஸ் ஆராய்ச்சி மையத்துக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்க வேண்டும்'' என குறிப்பிடப்பட்டுள்ளது.
-
இலங்கைக்கு இந்தியா வழங்கிய 38,000 டன் பெட்ரோல், டீசல்.. நெகிழ்ந்து போன இலங்கை அதிபர் -
கச்சா எண்ணெயிலிருந்து எல்பிஜி தயாரிக்க முடியாதா? மீண்டும் மண்ணெண்ணெய் விற்பனை! இந்தியாவுக்கு சிக்கல் -
அந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
பெட்ரோல் விலை பிச்சுகிட்டு போக போகுது..வேலையைக் காட்டிய ரஷ்யா! இந்தியாவுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
ஈரான் காட்டிய பச்சைக்கொடி.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த 2 எல்பிஜி கப்பல்கள்.. கெத்து காட்டும் இந்தியா! -
இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருவது உண்மைதான்! அம்பலப்படுத்திய அமெரிக்கா -
வங்கி கணக்கில் வந்து விழுந்த ரூ.10 கோடி.. "வேண்டாம்" என திருப்பி கொடுத்த பெண்! என்ன காரணம் தெரியுமா -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications