ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு.. மேற்கு ஆசியா, ஹமாஸ் விவகாரம் குறித்து ஆலோசனை.. ஏன் முக்கியம்?
டெல்லி: இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினருக்கு இடையேயான போர் உக்கிரமாக நடைபெற்று வரும் நிலையில், ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பேசினார். இந்த பேச்சுவார்த்தையின் போது பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் காசா நகரை கட்டுப்பாட்டிற்குள் வைத்து இருக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையேயான போர் 31-வது நாளை எட்டியுள்ளது. காசா மீது கடுமையான தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் - ஹமாஸ் இயக்கத்தினர் இடையேயான போரால் இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இஸ்ரேல் - ஹமாஸ் போரால் மத்திய ஆசியாவில் நிலவும் கடினமான சூழல் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில், ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். இந்த பேச்சுவார்த்தையின் போது இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் குறித்தும் பேசினர். மேற்கு ஆசியாவில் நிலவும் கடினமான சூழல் குறித்தும் இரு தலைவர்களும் தங்கள் கவலைகளை பகிர்ந்து கொண்டனர். மேலும், பதற்றத்தை தணிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் மனிதாபிமான உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் என்பது குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.
அதோடு, அந்த பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பை மீண்டும் கொண்டு வருவது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டனர். ஈரான் அதிபருடனான பேச்சுவார்த்தை குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:- இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான மோதல் குறித்தும் இந்த மோதலால் மேற்கு ஆசியாவில் நிலவும் கடினமான சூழ்நிலை குறித்தும் கருத்துக்களை பரிமாறிக்கொண்டோம். சபஹார் துறைமுகம் உள்பட இந்தியா - ஈரான் இடையேயான இரு தரப்பு ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள முன்னெற்றம் குறித்தும் பேசினோம்" என்று கூறியுள்ளார்.
இஸ்ரேல்- ஹமாஸ் இயக்கத்தினர் இடையேயான போர் தொடந்து நீடித்துக்கொண்டே உள்ளது. சமீப நாட்களாக காசா மீது மிகக் கடுமையான தக்குதலை இஸ்ரேல் முன்னெடுத்துள்ளது. வடக்கு காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் ஒரே நாளில் 200 பேர் கொல்லப்பட்டனர். இந்த போர் உக்கிரம் அடைந்துள்ள நிலையில், பிரதமர் மோடியும் ஈரான் அதிபரும் தொலைபேசி வாயிலாக பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
-
அமெரிக்க அதிபர் டிரம்பின் ராஜதந்திரம்.. கண்டுபிடித்த ஈரான்.. அடுத்த நொடியே தலைகீழான எண்ணெய் விலை -
ஈரான் மீதான தாக்குதல் 5 நாட்களுக்கு நிறுத்தம்.. அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீர் அறிவிப்பு! -
ஈரான் சரியான புத்திசாலித்தனம்.. அமெரிக்கா போரை வைத்தே.. கோடி கோடியாக கூடுதலாக சம்பாதிக்கும் வித்தை -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
டிரம்ப் சொன்னது பொய்யா? பேச்சுவார்த்தையே நடக்கவில்லை.. பின்வாங்கிட்டாங்க! எகிறி அடிக்கும் ஈரான் -
கண் கொத்தி பாம்பாக காத்திருக்கும் CIA & மொசாட்.. கொஞ்சம் அசந்தாலும் ஈரான் மொத்தமாக சிதஞ்சிடும் -
ஈரான் போரில் தலையை விட்ட பாகிஸ்தான்.. ட்ரம்ப் - பாக். ராணுவ தளபதி ரகசிய போன் கால்.. ஷாக் பின்னணி -
ட்ரம்ப் சொல்லி வாயை கூட மூடல..ஈரானில் விழுந்த ஏவுகணைகள்! பற்றி எரிந்த எல்பிஐ மையம்..மீண்டும் சிக்கல் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
இதை வச்சு தான் சீன் போட்டீங்களா? எப்15 போர் விமானத்தை குருவி போல் சுட்ட ஈரான்? அமெரிக்காவுக்கு ஆப்பு -
பஹ்ரைனில் சொதப்பிய US! பாதுகாப்பு டெக்னாலஜியில் பெரிய ஓட்டை! குடியிருப்புக்குள் பாய்ந்த ஏவுகணை -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம்












Click it and Unblock the Notifications