எமர்ஜென்சியை அமல்படுத்திய காங். சட்டங்களை துஷ்பிரயோகம் செய்வது பற்றி பேசலாமா? அமித்ஷா காட்டம்
டெல்லி: எமர்ஜென்சியை அமல்படுத்திய காங்கிரஸ் கட்சி சட்டங்களை துஷ்பிரயோகம் செய்வது பற்றி பேசலாமா? என ராஜ்யசபாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா காட்டமாக கேள்வி எழுப்பினார்.
உபா சட்ட திருத்த மசோதா மீது ராஜ்யசபாவில் இன்று விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், உபா சட்ட திருத்தங்களை முன்வைத்து பாஜகவை கடுமையாக விமர்சித்தார்.

இந்த விமர்சனங்களுக்கு பதிலளித்து அமித்ஷா பேசியதாவது:
உபா சட்ட திருத்தத்தின் படி எந்த ஒரு தனிநபரின் உரிமையும் பாதிக்கப்படாது. அதற்காக அத்தனை அம்சங்களும் இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ளன.
எமர்ஜென்சியின் போது இந்த நாட்டில் என்ன நடந்தது? அத்தனை ஊடகங்களும் தடை செய்யப்பட்டன. அத்தனை எதிர்க்கட்சித் தலைவர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். 19 மாதங்களாக நாட்டில் ஜனநாயகம் என்பதே இல்லை.
இப்போது அந்த காங்கிரஸ் கட்சியினர் சட்டத்தை துஷ்பிரயோகம் செய்வது பற்றி பேசுகின்றனர்.. நீங்கள் உங்கள் கடந்த காலங்களைத் திரும்பிப் பாருங்கள்.
நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்த போது உபா சட்ட திருத்தங்களை ஆதரித்தோம். பயங்கரவாதத்துக்கு மதம் என்பதே கிடையாது என்பதில் நாங்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறோம். பயங்கரவாதம் என்பது மனிதகுலத்துக்கு எதிரானது. பயங்கரவாதம் என்பது தனிப்பட்ட அரசுக்கோ அல்லது தனிநபருக்கோ எதிரானது அல்ல.
உபா சட்ட திருத்த மசோதாவுக்கு முழுமையான நாம் ஆதரவு தெரிவித்தால் நமது விசாரணை அமைப்புகள் சர்வதேச அளவில் அதிக அதிகாரங்களுடன் செயல்பட வாய்ப்பு ஏற்படும். ஒரு பயங்கரவாத இயக்கமே தடை செய்யப்பட்ட பின்னரும் தனிநபரை பயங்கரவாதி என ஏன் அறிவிக்க வேண்டும் என கேல்வி எழுப்புகிறார் ப. சிதம்பரம்.
தனிநபர்களையும் பயங்கரவாதி என அறிவிக்காவிட்டால் அவர்களது நடவடிக்கையை கட்டுப்படுத்த முடியாமல் போகும். இவ்வாறு அமித்ஷா பேசினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications