டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இன்னொரு லாக்டவுன்... பொருளாதாரம் பேரழிவை சந்திக்கும்.. ராகுலுடனான உரையாடலில் ரகுராம் ராஜன் வார்னிங்

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா வைரஸை கட்டுப்படுத்த இந்தியா 2 -வது அல்லது 3-வது லாக்டவுன் ஒன்றை அமல்படுத்தினால் பொருளாதாரம் மிகப் பெரும் பேரழிவை சந்திக்கும் என்று ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் எச்சரித்துள்ளார்.

கொரோனா லாக்டவுன் ஏற்படுத்தியிருக்கும், ஏற்படுத்த இருக்கும் விளைவுகள் தொடர்பாக ரகுராம் ராஜனுடன் இன்று வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார். ஒரு செய்தியாளரைப் போல ராகுல் காந்தி கேள்விகளை கேட்டார்.

இந்த கேள்விகளுக்கு ரகுராம் ராஜன் அளித்த பதில்களின் தொகுப்பு:

Another lockdown will be devastating for India’s economy, warns Raghuram Rajan

கொரோனா வைரஸ் லாக்டவுன் போன்றவைகள் சர்வதேச பொருளாதாரம் குறித்த புதிய விவாதங்களை உருவாக்கி உள்ளது. இந்தியாவில் 2-வது அல்லது 3-வது லாக்டவுன் என்பது பொருளாதாரத்தில் மிக மோசமான பேரழிவை ஏற்படுத்தும். அது சாத்தியமானதும் அல்ல.

லாக்டவுன் என்பது நாட்டின் பொருளாதாரத்துக்கு ஏற்றதானது அல்ல. தற்போதைய நிலையில் ஏழைகளின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க சுமார் ரூ65,000 கோடி நிதி உதவி தேவைப்படுகிறது.

கடன் விவகாரம்.. ராகுல் காந்தி ப சிதம்பரத்திடம் டியூசன் போக வேண்டும்.. பிரகாஷ் ஜவடேகர்கடன் விவகாரம்.. ராகுல் காந்தி ப சிதம்பரத்திடம் டியூசன் போக வேண்டும்.. பிரகாஷ் ஜவடேகர்

கொரோனா தாக்கத்தை இந்தியாவில் இருந்து 100% வெளியேற்ற முடியாது. அது சாத்தியமற்றது. நமது பரிசோதனை முறைகள் மிகவும் வேறுபட்டதாகவும் இருக்கிறது. இவ்வாறு ரகுராம் ராஜன் கூறினார்.

இதேபோல் பல்வேறு துறைசார் வல்லுநர்களுடன் ராகுல் காந்தி தொடர்ந்து விவாதம் நடத்த உள்ளார்.

English summary
Former governor of the Reserve Bank of India Dr Raghuram Rajan has warned that if India has to go for a second or third lockdown to check the spread of coronavirus disease it will be devastating for the economy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X