ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக இருக்கிறது தமிழக அரசு.. வைகோ சாடல்
Recommended Video

டெல்லி: தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்தால்தான் ஸ்டெ்லைட்டை தடுக்க முடியும். ஆனால் கொள்கை முடிவை தமிழக அரசு எடுக்காது என்பதே உண்மை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
கடந்த மே மாதம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் நடத்திய போராட்டத்தின் போது, நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப் பட்டனர். இதனையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக தமிழக அரசு அறிவித்தது.

அந்த அரசாணையை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. அதன் உத்தரவின் பேரில், அமைக்கப்பட்ட முன்னாள் தலைமை நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழு, சில நிபந்தனைகளுடன் ஆலையை திறக்க அனுமதிக்கலாம் என அறிக்கை தாக்கல் செய்தது.
அதனை தொடர்ந்து, தேசிய பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயக்க தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டுமென கடந்த 15ம் தேதி உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
மனுவை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இன்று வழக்கை விசாரித்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவு செல்லும், அதற்கு தடை விதிக்க முடியாது என்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு தமிழகத்தை சேர்ந்த முக்கிய அரசியல் கட்சியினரும், ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புக்குழுவினரும் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களுக்கு வைகோ பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஸ்டெர்லைட் வழக்கில் என்னையும் சேர்க்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. நீர் மாசு ஏற்படுவதைத் தடுக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை இயங்கலாம் என்று சொல்லவில்லை.
ஸ்டெர்லைட் ஆலை இயங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்கலாம் என்றுதான் சொல்லியுள்ளது. தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்தால்தான் ஸ்டெ்லைட்டை தடுக்க முடியும். ஆனால் கொள்கை முடிவை தமிழக அரசு எடுக்காது என்பதே உண்மை . இருப்பினும், ஸ்டெர்லைட் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்று வைகோ கூறினார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications