அடிபொலி.. பிரதமர் மோடியை நேரில் சந்தித்த ஆப்பிள் சிஇஓ.. நாடு முழுவதும் முதலீடு செய்வதாக அறிவிப்பு
டெல்லி: உலகின் நம்பர் 1 ஸ்மார்ட் போனான ஐபோனை தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி டிம் குக், இந்தியா வந்து இருக்கும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசி உள்ளார்.
உலகின் விலை உயர்ந்த மற்றும் அதிக தொழில்நுட்ப வசதிகளை கொண்ட தொழில்நுட்ப கருவிகளை வெளியிடும் நிறுவனம் என்றால் அது ஆப்பிள்தான். ஆப்பிள் நிறுவனம் வெளியிடும் ஐபோன்களையே விளையாட்டு பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பெரும் கோடீஸ்வரர்கள், தொழிலதிபர்கள் என அனைவரும் பயன்படுத்துகிறார்கள்.

நடுத்தர ஏழை மக்களுக்கும் ஆப்பிள் போனை வாங்கி பயன்படுத்த வேண்டும் என்ற கனவு இருக்கும். அதேபோல் ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கும் கணினி, மற்றும் லேப்டாப்பான மேக், ஐபாட் டேப், ஐ வாட்ச், ஏர் பாட் போன்றவையும் பலரால் விரும்பி பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவிலும் ஆப்பிள் பொருட்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவற்றின் விலை லட்சங்களை தொட்டுவிட்டாலும் அதன் தரம் காரணமாக பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறையாமல் உள்ளது. அமெரிக்கா, ஐரோப்பா, அரபு நாடுகளில் ஆப்பிள் நிறுவத்தின் ஸ்டோர்கள் அதிகளவில் உள்ளன.
அந்த வகையில் இந்தியாவில் முதல் ஆப்பிள் ஸ்டோர் கடந்த சில நாட்களுக்கு முன் மும்பையில் திறக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியா வந்த ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ டிம் குக் இதனை திறந்து வைத்தார். தொடர்ந்து இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று புகைப்படங்களை எடுத்து ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்.
இந்த நிலையில் நாளை தலைநகர் டெல்லியில் சாகெட் செலெக்ட் சிட்டியில் மாலை திறந்து வைக்க இருக்கிறார். இதற்கிடையே இன்று ஆப்பிள் சிஇஒ டிம் குக் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். அத்துடன் மத்திய தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்விணி வைஷ்னவையும் அவர் சந்தித்து பேசி உள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் ட்ம் குக், "தொழில்நுட்பத்தில் இந்தியாவின் எதிர்காலத்தில் ஏற்படவிருக்கும் நேர்மறையான தாக்கம் குறித்து உங்களின் பார்வையை நாங்கள் பகிர்ந்துகொள்கிறோம். கல்வி, டெவலப்பர்கள் முதல் உற்பத்தி, சுற்றூச்சூழல் வரை நாடு முழுவதும் நாங்கள் வளர முதலீடு செய்ய இருக்கிறோம்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
“போர் நடந்தாலும்.. எரிபொருள் கொள்முதலில் பாதிப்பு இருக்காது”.. நாடாளுமன்றத்தில் மோடி உறுதி! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications