நடைமுறைகளின் படிதான் நீதிபதி விக்டோரியா கவுரி நியமனம்.. அவதூறு பேசக்கூடாது..மத்திய அரசு விளக்கம்
நீதிபதி விக்டோரியா கவுரி நியமனம் பற்றி அவதூறாக பேசக்கூடாது என்று மாநிலங்களவையில் மத்திய அரசு கண்டிப்புடன் தெரிவித்தது.
டெல்லி: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கவுரி உரிய நடைமுறைகளின் படியே நியமனம் செய்யப்பட்டதாகவும் இதில் அவதூறாக பேசக்கூடாது என்றும் மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பியின் கேள்விக்கு மத்திய அரசு கண்டிப்புடன் பதிலளித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக அண்மையில் விக்டோரியா கவுரி பதவியேற்றார். விக்டோரியா நியமனத்திற்கு கடுமையான எதிர்ப்புகளும் எழுந்தன.
விக்டோரியா கவுரி நியமனத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடரப்பட்டன. எனினும், இந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

நியமனம் சரியானதுதானா?
இதனிடையே, நீதிபதி விக்டோரியா கவுரி நியமன விவகாரம் நேற்று நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி ஜவஹர் சிர்க்கார் நேற்று பேசும் போது, "சாதிய கருத்துக்களயும் சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துக்களையும் கூறிய நீதிபதி விக்டோரியா கவுரி நியமனம் சரியானதுதானா? என்ற கேள்வியை முன்வைத்தார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பியான ஜவஹர் சிர்க்காரின் இந்த பேச்சுக்கு மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கடும் ஆட்சேபம் தெரிவித்தார்.

அவதூறாக பேசக்கூடாது
பியூஸ் கோயல் கூறுகையில், "சிறிது கண்ணியத்தை கடைப்பிடித்து பேச வேண்டும். நீதிபதி உரிய நடைமுறைகளின் படியே நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். எனவே எம்.பி இதுபோன்று அவதூறாக பேசக்கூடாது. இந்த விவகாரத்தில் அவைத்தலைவர் தலையிட வேண்டும்" என்றார். இதற்கு பதிலளித்து பேசிய மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர், ஜனநாயகத்தில் 3 தூண்களும் இணைந்து செயல்பட வேண்டும்.

கிரண் ரிஜிஜூ பாராட்டு
அப்போதுதான் உரிய பலன் கிடைக்கும். குறிப்பிடும் நீதிபதியின் நியமனம் விவகாரத்தில் உச்ச நீதிமன்றமும் தீர்ப்பளித்து விட்டது. எனவே இந்த விவகாரத்தை ஒதுக்கி வைக்க வேண்டும். நீதித்துறை விதிகளை மனதில் வைத்துக்கொண்டு உறுப்பினர் கேள்விகளை முன்வைக்க வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்" என்றார். அப்போது குறுக்கிட்ட மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கரின் நிலைப்பாட்டை பாராட்டி பேசினார்.

கருத்து வேறுபாடு என்ற கேள்வியே இல்லை
தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி ஜவஹர் சிர்க்கார் மற்றொரு கேள்வியையும் முன்வைத்தார். அதில், நீதிபதிகள் நியமன விவகாரத்தில் மத்திய அரசுக்கும் நீதித்துறைக்கும் இடையே கருத்தொற்றுமை இல்லையா? என்று வினவினார். இதற்கு பதிலளித்த மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, கருத்து வேறுபாடுகள் என்பது ஜனநாயகத்தில் ஒரு அங்கம்தான். இதற்கு தீர்வு காணவும் வழிமுறைகள் இருக்கின்றன. உயர் நீதிமன்றங்களில் இருக்கும் 210 காலியிடங்கள் பற்றி கொலிஜியத்திடம் இருந்து எந்த ஒரு பரிந்துரையும் வரவில்லை. எனவே கருத்து வேறுபாடு என்ற கேள்வியே இல்லை" என்றார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications