கொரோனா தடுப்பு.. போலீசாருக்கு விமானப்படை மாஸ் மரியாதை.. டெல்லி போலீஸ் நினைவுச் சின்னத்திற்கு சல்யூட்
கொரோனா தடுப்பு பணிகளை செய்து வரும் போலீசாருக்கு மரியாதை செலுத்தும் விதமாக டெல்லி போலீஸ் நினைவு சின்னத்திற்கு விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் இன்று மரியாதை செலுத்தப்பட்டது.
டெல்லி: கொரோனா தடுப்பு பணிகளை செய்து வரும் போலீசாருக்கு மரியாதை செலுத்தும் விதமாக டெல்லி போலீஸ் நினைவு சின்னத்திற்கு விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் இன்று மரியாதை செலுத்தப்பட்டது.
Recommended Video
இன்று நாடு முழுக்க கொரோனா தடுப்பு பணிகளை நாடு முழுக்க மேற்கொள்ளும் முன்கள பணியாளர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக முப்படை மரியாதை செய்யப்பட்டு வருகிறது. இதற்கான விமானப்படை விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மருத்துவமனைகள் மீது மலர்கள் தூவி வருகிறது.

காலை 10 மணி முதல் 11 மணி வரை இந்த விமானப்படை அணிவகுப்பு நடக்கிறது. 500 மீட்டர் உயரத்தில் மிக தாழ்வாக இந்த விமானங்கள் பறந்து செல்கிறது. போர் விமானங்கள் சுகோய் -30 எம்கேஐ, ஜாகுவார் மற்றும் மிக் 29 ஆகிய விமானங்கள் நாடு முழுக்க பறக்க உள்ளது. டெல்லியில் ராஜ வீதியில் இந்த விமானங்கள் பறக்கும்.
அதன் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள போலீஸ் மெமோரியலில் மலர் வளையம் வைக்கப்படுகிறது. மேலும் டெல்லியில் போலீஸ் நினைவுச் சின்னம் மீது விமானப் படை ஹெலிகாப்டர்கள் மலர்தூவி மரியாதை செய்தது.
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு இருக்கும் காவலர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த மரியாதை செய்யப்பட்டது.
Delhi: Chopper of the Indian Air Force showers flower petals on the Police War Memorial in order to express gratitude and appreciation towards the police officials#COVID19 pic.twitter.com/HTr0K7zt2h
— ANI (@ANI) May 3, 2020
டெல்லி போலீஸ் நினைவு சின்னம் கடந்த 2018ல் நிறுவப்பட்டது. இந்தியாவில் சுதந்திரத்திற்கு பின் பல்வேறு நிகழ்வுகளில் பலியான 34844 போலீசாருக்கு மரியாதை செய்யும் விதமாக இந்த நினைவு சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் சாணக்யபுரி பகுதியில் 6.12 ஏக்கர் பரப்பளவில் இந்த சின்னம் அமைந்துள்ளது.
இங்கு 9.1 மீட்டர் உயரமும் 238 டன் எடையும் கொண்ட கிரானைட் கல் தூண் அமைக்கப்பட்டுள்ளது . அதேபோல் இங்கு இருக்கும் 'வீரச்சுவர் ' தூணில் மொத்தம் 34844 போலீசாரின் பெயரும் எழுதப்பட்டுள்ளது. இதன் மீதுதான் இன்று இந்தியா விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டு மரியாதை செய்யப்பட்டது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications