அருண் ஜெட்லி உடலுக்கு நாளை காலை பாஜக அலுவலகத்தில் அஞ்சலி.. மாலை தகனம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி உடல் நாளை பிற்பகல் நிகாம்போத் பகுதியில் தகனம் செய்யப்படும் என்று பாஜக தலைவர் சுதன்ஷு மிட்டல் தெரிவித்தார்.
உடல் நலக்குறைவால் அருண் ஜெட்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று மரணமடைந்தார். இதையடுத்து, எய்ம்ஸில் வழக்கமான பணிகள் முடிந்ததும் ஜெட்லியின் உடல் அவரது கைலாஷ் காலனி இல்லத்திற்கு கொண்டு செல்லப்படும்.

நாளை காலை, அவரது உடல் பாஜக தலைமையகத்திற்கு கொண்டு செல்லப்படும். அங்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பிற தலைவர்கள் இறுதி மரியாதை செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாஜக தலைமையகத்திலிருந்து, பின்னர் ஜெட்லி உடல் இறுதி சடங்குகளுக்காக நாளை மாலை, நிகாம்போத் கட்டிற்கு கொண்டு செல்லப்படும். அங்கு, இறுதி தகனம் நடைபெறும்.












Click it and Unblock the Notifications