இந்தியாவை அசைத்து பார்த்த இரு பெரும் நிகழ்வுகள்.. லாவகமாக சமாளித்த அருண் ஜெட்லி.. அதுதான் திறமை!
இரு பெரும் நிகழ்வுகளில் அருண்ஜெட்லியின் திறமை வெளிப்பட்டது
Recommended Video
டெல்லி: இந்திய நாட்டினையே அசைத்து பார்க்கும்.. இரு பெரும் செயல்பாடுகளில்.. அருண்ஜெட்லியின் பங்கு அதிகமானதே! ஒன்று ஜிஎஸ்டி.. இன்னொன்று பண மதிப்பிழப்பு!
'ஓர் நாடு, ஒரே வரி விதிப்பு முறை' என்ற கோஷம் நாட்டை உலுக்கும் என்று நம் யாருக்குமே ஆரம்பத்தில் தெரிந்திருக்க நியாயமில்லைதான்.
பல வருட கால முழக்கம் இது.. ஆனால் யார் இதை அமல்படுத்துவது என்பதில்தான் திறமையே அடங்கி இருந்தது. அதனால்தான் முழக்கத்தை அமல்படுத்த முரண்களும் எழுந்து சிக்கலாயின.

பிரதமர்
மன்மோகன் சிங் அரசு எவ்வளவோ முயற்சித்தும் இதை நடைமுறைப்படுத்த முடியவில்லை.. அவ்வளவு ஏன்.. மோடி முதல் முறை பிரதமராக இருந்தபோதுகூட இந்த ஜிஎஸ்டியை போதிய உறுப்பினர் இல்லாததால் கொண்டுவர முடியவில்லை என்பதுதான் உண்மை.

விமர்சனங்கள்
இந்த சமயத்தில்தான் அருண்ஜெட்லியின் திறமை பளிச்சிட்டது. மாநில நிதி அமைச்சர்களை கூட்டினார்.. இந்த திட்டங்களை அமல்படுத்த தன்னால் முடிந்த அனைத்து பங்கையும் வெளிப்படுத்தினார். யார் என்ன சொன்னாலும், எத்தனை எதிர்ப்புகள், கண்டனங்கள், விமர்சனங்கள் தன்னை நோக்கி பாய்ந்தாலும் அதை அமல்படுத்த துணிந்தார் அருண்ஜெட்லி.

நிதி திட்டம்
சட்டத்தை விரல் நுனியில் வைத்திருக்கும் அருண்ஜெட்லி, இந்த திட்டத்தை அமல்படுத்துவதில் உள்ள நெளிவு சுழிவுகளை மிக அழகாக அவையில் எடுத்துரைத்தார். அனைத்து தரப்பினரையும் சமாளித்து, சம்மதிக்க வைப்பது என்பது லேசுபட்ட காரியம் இல்லை. அருண்ஜெட்லி கற்ற சட்ட நுணுக்கத்தின் ஏராளங்கள்தான்.. இந்த நிதி திட்டத்தின் கொள்கை, மற்றும் அதன் செலவினங்களை புட்டு புட்டு வைக்க காரணமாக இருந்தது.

பணமதிப்பிழப்பு
இது மட்டுமில்லை.. திடீரென 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வந்தவுடன் திக்கு முக்காடி போயினர் நம் மக்கள். அது என்ன பணமதிப்பிழப்பு.. அப்படின்னா என்ன.. யாரை கேட்பது, யார் புரிய வைப்பார்கள், யார் தெளிவுபடுத்துவார்கள்.. என்பதே நாட்டு மக்களின் அப்போதைய குழப்பமாக இருந்தது.

பற்றாக்குறை
ஆனால், அந்த நேரத்தில் நிதி அமைச்சராக இருந்த அருண்ஜெட்லியே இதை சாதுர்யா பேச்சால் எடுத்துரைத்து விளக்கினார். பலமுறை தெளிவுபடுத்தினார். ரூபாய் நோட்டு பற்றாக்குறையை சமாளித்ததில் அருண்ஜெட்லியின் செயல்பாடுகள் வியக்க வைக்கும் வகையிலேயே இருந்தது.

தெளிவு
இந்த பணமதிப்பிழப்பு நடைமுறைப்படுத்தி 2 வருஷம் ஆனாலும், இதற்கு எதிர்ப்பும், கண்டனமும் தெரிவிப்பவர்களுக்கு இறுதிவரை தனது விளக்கத்தை தந்து வந்தார் அருண்ஜெட்லி. "ரூபாய் நோட்டை தடை செய்வது என்பது பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் நோக்கம் அல்ல. நாட்டில் வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பதுதான் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் முக்கிய இலக்கு" என்பதை தெளிவாக விளக்கியே வந்தார்.

தவிர்க்கவே முடியாதவர்
நாட்டின் பொருளாதாரத்தை முறைப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட அதிமுக்கிய நடவடிக்கையான பணமதிப்பிழப்பு விவகாரம் ஆனாலும் சரி, ஜிஎஸ்டி விவகாரம் ஆனாலும் சரி.. இரண்டிலுமே அருண்ஜெட்லியின் பங்கு அதிமுக்கியமானது.. தவிர்க்க முடியாதது என்பதை நாம் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்!
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications