20 பேர் மாண்டது போதாதா? மத்திய அரசின் விவசாய சட்டங்களின் நகலை கிழித்த டெல்லி முதல்வர் கேஜ்ரிவால்!
டெல்லி: மத்திய அரசின் 3 விவசாய சட்டங்களின் நகல்களை டெல்லி சட்டசபையில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கிழித்து எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் இன்றும் 22-வது நாளாக தொடருகிறது. கடும் பனி, குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராட்டம் தொடருகிறது.
விவசாய சட்டங்களில் திருத்தம் கொண்டு வரலாம் என்கிற மத்திய அரசின் யோசனை நிராகரிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றமும் கூட, விவசாயிகள் போராட உரிமை உள்ளது; அதுவரை விவசாய சட்டங்களை செயல்படுத்தக் கூடாது என கருத்து தெரிவித்துள்ளது.

நிராகரிப்பு- சட்ட நகல்கள் கிழிப்பு
இந்த நிலையில் டெல்லி சட்டசபையில் மத்திய அரசின் விவசாய சட்டங்களை நிராகரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் தீர்மானத்தின் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து விவசாய சட்டங்களின் நகல்களை சட்டசபையிலேயே கிழித்தும் எறிந்தார்.

பிரிட்டிஷாரைவிட மோசம்
அப்போது கேஜ்ரிவால் பேசியதாவது: மத்திய அரசின் விவசாய சட்டங்களை கிழித்து எறிகிறேன். மேலும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களைவிட மோசமானவர்களாக மத்திய ஆட்சியாளர்கள் மாறிவிடக் கூடாது எனவும் வேண்டுகோள் வைக்கிறேன். கொரோனா காலத்தில் விவசாய சட்டங்களை அவசர கதியில் கொண்டுவர வேண்டிய தேவை என்ன?

பகத்சிங்குகள் உருவாகின்றனர்
நாட்டின் ஒவ்வொரு விவசாயியும் இப்போது பகத்சிங்காக உருவாகி இருக்கின்றனர். ஆனால் மத்திய அரசோ, புதிய விவசாய சட்டங்களின் நன்மைகள் தொடர்பாக விவசாயிகளிடம் எடுத்துரைப்போம் என பேசி வருகிறது. உத்தரப்பிரதேசத்தின் முதல்வரோ விவசாயிகளிடம் உங்கள் நிலங்கள் கையகப்படுத்தப்படமாட்டாது என்கிறார். இதுதான் விவசாயிகளுக்கு கிடைக்கப் போகும் நன்மையா?

20 பேர் மாண்டது போதாதா?
டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் சீக்கிய மதகுரு உட்பட இதுவரை 20 பேர் மரணம் அடைந்துவிட்டனர். அதாவது நாள்தோறும் ஒருவர் வீதம் உயிரை தியாகம் செய்து வருகின்றனர். இன்னமும் எத்தனை உயிர்கள்தான் உங்களுக்கு வேண்டுமோ? இவ்வாறு அரவிந்த் கேஜ்ரிவால் ஆவேசமாக கேள்வி எழுப்பினார். முன்னதாக ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களும் விவசாய சட்ட நகல்களை சட்டசபையில் கிழித்து எறிந்து எதிர்ப்பை காட்டினர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications