முந்தைய ஆண்டை விட.. 2024ல் இந்தியாவின் வளர்ச்சி குறைவாகதான் இருக்கும்! ஆசிய வளர்ச்சி வங்கி கணிப்பு
டெல்லி: முந்தைய ஆண்டை விட அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி குறைவாகதான் இருக்கும் என ஆசிய வளர்ச்சி வங்கி தெரிவித்திருக்கிறது.
ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சியும், அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அடிப்படையாக கொண்டே கணக்கிடப்படுகிறது. அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டில் நாடு 7.0% மற்றும் 7.6% என வளர்ச்சியை கண்டிருந்தது. ஆனால் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்த வளர்ச்சி 7.0% மற்றும் 7.2% என்கிற அளவில்தான் இருக்கும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி தெரிவித்திருக்கிறது.

நேற்று 'ஜஏசியன் டெவலப்மென்ட் அவுட்லுக்' எனும் அறிக்கையை வங்கி வெளியிட்டிருந்தது. அதில்தான் இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 2024ம் ஆண்டை பொறுத்த அளவில் வளர்ச்சி என்பது, மத்திய மற்றும் மாநில அரசுகளின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான அதிக மூலதனச் செலவு, தனியார் நிறுவன முதலீட்டின் அதிகரிப்பு, வலுவான சேவைத் துறை செயல்திறன் மற்றும் மேம்பட்ட நுகர்வோர் நம்பிக்கை ஆகியவற்றின் மூலமாகதான் சாத்தியமாகும்.
இதே 2025ல் வளர்ச்சி என்பது, ஏற்றுமதி, உற்பத்தி திறன் அதிகரிப்பு, வேளாண் உற்பத்தி ஆகியவை மூலம்தான் சாத்தியமாகும் என்றும் ஆசிய வளர்ச்சி வங்கி கூறியுள்ளது.
2023-2024 ஆண்டை எடுத்துக்கொண்டால், ஏப்ரல்-ஜூன் மற்றும் ஜூலை-செப்டம்பர் ஆகிய இரண்டு காலாண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் 7.8 சதவீதம் மற்றும் 7.6 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 8.4 சதவீதமாக வளர்ச்சியடைந்தது. இது சர்வதேச அளவில் இந்தியாவை வேகமாக வளரும் நாடாக காட்டியது. ஆனால் இந்த வளர்ச்சி சீரானதாக இருக்க வேண்டும் என்று பொருளாதார நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும், நிதி ஒருங்கிணைப்பை மேற்கொள்ளும் அதே வேளையில் உள்கட்டமைப்பு மேம்பாட்டை அதிகரிக்கவும், வணிகச் சூழலை செயல்படுத்தவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் ஏற்றுமதியை அதிகரிக்கவும், எதிர்கால வளர்ச்சியை அதிகரிக்கவும் உற்பத்திப் போட்டித்தன்மையை அதிகரிக்க உதவும் என்று ஆசிய வங்கி தெரிவித்திருக்கிறது.
அதேபோல 2024ம் ஆண்டில் பணவீக்கம் 4.6 சதவிகிதமாக குறையும் என்றும், 2025ல் இது 4.5ஆக குறையும் என்றும் ஆசிய வங்கி தெரிவித்திருக்கிறது. ஏற்கெனவே தேர்தலின் முக்கிய பிரச்னையாக வேலையின்மை, விலைவாசி உயர்வு மற்றும் வளர்ச்சி ஆகியவை இருக்கிறது என்று ஆய்வுகள் தெரிவித்திருந்தன. இந்நிலையில், முந்தைய ஆண்டை விட அடுத்த இரண்டு ஆண்டுகளில் வளர்ச்சி குறைவாகத்தான் இருக்கும் என்று ஆசிய வங்கி கூறியிருப்பது விவாதங்களை கிளப்பியுள்ளது.
-
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில்












Click it and Unblock the Notifications