அசாமில் யோகி மாடல்.. தீவிரவாத அமைப்புடன் தொடர்பு எனக்கூறி மதரசா பள்ளியை இடித்து தள்ளிய புல்டோசர்
டெல்லி: அசாமில், வங்கதேச தீவிரவாத அமைப்புடன் தொடர்பு கொண்டதாக கைது செய்யப்பட்டுள்ள நபரின் மதரசா பள்ளியானது ஜேசிபி வாகனம் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தமிழகம், மகாராஷ்டிரா, கர்நாடகம் உள்பட பல்வேறு இடங்களில் என்ஐஏ மற்றும் அந்தந்த மாநில போலீசார் தற்போது தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புகொண்டவர்களாக கருதப்படும் நபர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இதேபோல் கடந்த மாதம் அசாம் மாநிலத்தின் பார்பேடா, கவுகாத்தி மற்றும் மொரிகான் உள்ளிட்ட மாவட்டங்களில் மத்திய புலனாய்வு அமைப்பினர் மற்றும் போலீசார் இணைந்து பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

அசாமில் 12 பேர் கைது
இந்த சோதனையின்போது அண்டை நாடான வங்காளதேசத்தின் அன்சருல்லா பங்க்ளா டீம் மற்றும் ஏக்யூஐஎஸ் எனும் தீவிரவாத அமைப்புடன் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இந்த அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறி 12 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

முப்தி முஸ்தபா கைது
கைது செய்யப்பட்டவர்களில் மொரிகான் மாவட்டம் மொய்ராபாரி பகுதியை சேர்ந்த முப்தி முஸ்தபா என்பவரும் ஒருவர். இவர் மதரசா பள்ளி நடத்தி வந்த நியைில் கைது செய்யப்பட்டுள்ளார். அதாவாது தீவிரவாத அமைப்புடன் பணபரிமாற்றம் மற்றும் சிலருக்கு அடைக்கலம் கொடுத்ததாக கூறிய குற்றச்சாட்டுகளால் அவர் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மதரசா பள்ளி இடிப்பு
இந்த நிலையில் முப்தி முஸ்தபா நடத்தி வரும் மதரசா பள்ளியை இன்று இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஸ்டைலில் ஜேசிபி வாகனம் மூலம் மதரசா பள்ளி இடிக்கப்பட்டது. இந்த சம்பவம் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தும் என்பதால் முன்னெச்சரிக்கையாக உரிய போலீஸ் பாதுகாப்புடன் மதரசா பள்ளி இடிக்கப்பட்டது. இதற்கு தற்போது ஏராளமானவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் கூறியது என்ன?
மேலும் ஹிமந்த பிஸ்வா கூறுகையில், ‛‛அசாம் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் மையமாக மாறி வருகிறது என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. இதுதொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று மோரிகானில் ஜாமியுல் ஹுதா மதரசா, பேரிடர் மேலாண்மை சட்டம் மற்றும் யுஏபிஏவின் கீழ் இடிக்கப்பட்டது. இந்த மதரசாவின் 43 மாணவர்கள் படித்து வந்தனர். அவர்கள் இப்போது வெவ்வேறு பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்'' என்றார்.












Click it and Unblock the Notifications