மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்!
டெல்லி: விஜய் முதலமைச்சரானதும் அவருக்கு வந்த முதல் நெருக்கடியே ஜோசியரால்தான். இப்படி இருக்கையில் இன்று பிரதமர் மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடனான சந்திப்பின் போதும் விஜய் தன்னுடன் ஜோசியர் ரிக்கி பண்டிட்டை அழைத்து சென்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
சினிமா நட்சத்திரமாக இருந்து, திரைத்துறையில் உச்சம் தொட்ட விஜய், அரசியலில் அடி எடுத்து வைத்த உடனே அவருக்கு கை கொடுத்து மக்கள் வெற்றியை தந்திருந்தனர். தேர்தலில் தனித்து பெரும்பான்மை பெற முடியவில்லை என்றாலும், கூட்டணி கட்சிகளின் உதவியுடன் விஜய் முதலமைச்சராக பதவியேற்றிருந்தார்.

60 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இருந்த திராவிட கட்சிகள் அதிர்ச்சியடையும் அளவுக்கு விஜய்யின் வெற்றி இருந்தது. எம்ஜிஆர் முதல் தேர்தலில் பெற்ற வாக்குகளை விடவும் அதிகமான சதவிகிதத்தில் விஜய் வாக்குகளை பெற்றிருந்தார். இப்படி இருக்கையில், அவர் முதலமைச்சரானதும் அவர் மீது வந்த முதல் பெரிய விமர்சனம், அவருடைய ஆஸ்தான ஜோதிடர் ரிக்கி பண்டித்துக்கு அரசு பணி கொடுத்ததுதான். ஒரு ஜோதிடருக்கு அரசு பதவி ஏன் கொடுக்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பினர்.
சட்டமன்றம் தொடங்கிய முதல் நாளில், எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த பிரேமலாதா விஜயகாந்த், "ஜோதிடரை அரசு பதவியில் அமர வைத்ததன் மூலம் இளைஞர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். இப்படியாக கடும் எதிர்ப்பு கிளம்பியதால், ரிக்கி பண்டித்துக்கு வழங்கப்பட்ட அரசு பணி வாபஸ் பெறப்பட்டது.
இந்நிலையில், இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை விஜய் சந்தித்திருந்தார். இதனை தொடர்ந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்தித்திருந்தார். இந்த சந்திப்பின்பொழுது ஜோதிடர் ரிக்கி பண்டிட்டும் முதல்வர் விஜய் உடன் சென்று இருக்கிறார்.
விஜய் பிரதமர் அலுவலகத்திற்கு சென்ற பொழுதும், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அலுவலகத்திற்கு சென்ற பொழுதும் அவரது வாகனத்திலேயே ஜோதிடர் ரிக்கி பண்டிட், முதல்வர் விஜயின் நண்பர் ஜெகதீசன் உடன் இருந்துள்ளனர். அதேபோல விஜயின் தனிப்பட்ட பாதுகாவலர் நயம் மூஷா, அவரது தனிப்பட்ட ஓட்டுநர் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
தனிப்பட்ட பாதுகாவலர்கள் எல்லாம் ஓகேதான். ஆனால் ஏன், ஜோதிடர் இந்த சந்திப்பில் இடம் பெற்றிருக்கிறார் என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
-
அதிமுகவில் இருந்து வந்தவர்களை சேர்த்தால்.. தவெக மீதான நம்பிக்கை போய்விடும்.. திருமாவளவன் வார்னிங்! -
“தவெக ஆச்சரியக்குறிகளே.. விஜய்யை தலைவராக வச்சுக்கிட்டு எதுக்கு இதெல்லாம்?” அதிமுக காட்டமான பதிலடி -
ஜனநாயக படுகொலை.. எதிர்க் கட்சிகள் ஒன்று சேர்வோம்! விஜய் செய்தது ஒரு மோசடி! அட்டாக் மோடில் அன்புமணி -
மகளிர் உரிமைத் தொகையில் இன்ப அதிர்ச்சி! தமிழக அரசின் ரூ.2500 அக்கவுண்ட்டில் வருவது எப்போது தெரியுமா -
இது அப்பட்டமான விதிமீறல்.. மேகதாது அணை கட்ட கர்நாடகாவை அனுமதிக்க கூடாது.. மோடிக்கு விஜய் கடிதம் -
சமூக வலைதளங்களை தவெகவினர் தந்திரமாக பயன்படுத்தினார்கள்.. கே.என்.நேரு பேச்சு -
தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்..மீண்டும் இணையும் அதிமுக கோஷ்டிகள்! கரங்கள் இணையும்..மனங்கள் இணையுமா? -
டாஸ்மாக்: பாட்டிலுக்கு ரூ.10 எக்ஸ்ட்ரா! பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி உண்மைகள்! விஜய் காதுக்கு வந்த செய்தி -
சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை திட்டம் ஒத்திவைப்பு.. பின்னணியில் முதல்வர் விஜய்யின் டெல்லி பயணம்! -
நகராட்சி டெண்டர் நடவடிக்கைகள் அனைத்தும் இனி ஆன்லைன் மூலம் மட்டுமே நடைபெறும்: தமிழ்நாடு அரசு அதிரடி! -
சிரித்து சமாளித்த எடப்பாடி.. வேலையைக் காட்டிய வேலுமணி! வெறுப்பில் சிவி சண்முகம்! இனிமே தான் ட்விஸ்ட் -
மாணவர்களுக்கு குட் நியூஸ்! ஜூன் 4ல் புத்தகம், சீருடை வழங்கப்படும்.. தமிழக அரசு அறிவிப்பு!












Click it and Unblock the Notifications