நாடு திரும்பிய விண்வெளி நாயகன்! சுபான்ஷு சுக்லாவுக்கு சிறப்பான வரவேற்பு
டெல்லி: 14 நாட்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியிருந்து ஆய்வு மேற்கொண்ட இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா தற்போது நாடு திரும்பியுள்ளார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த ஜூலை 15ம் தேதி விண்வெளியிலிருந்து பூமி திரும்பியிருந்த சுக்லா, அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் தற்போது இந்தியா வந்திருக்கிறார். டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய அவருக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் மத்திய இணையமைச்சர், டெல்லி முதல்வர் ஆகியோர் சிறப்பான வரவேற்பளித்திருக்கின்றனர்.

ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவிலிருந்து ஒருவர் விண்வெளிக்கு பறந்திருந்தது உலக நாடுகளிடையே கவனம் ஈர்த்திருந்தது. சுபான்ஷு சுக்லாவை விண்வெளிக்கு அனுப்பியதன் மூலம், விண்வெளி துறையில் இந்தியா தவிர்க்க முடியாத நாடாக உருவாகியிருக்கிறது என்பதை நாம் நிரூபித்திருக்கிறோம்.
விண்வெளித் துறையில் சாதனை:
இந்தியாவிலிருந்து கடந்த 1984ம் ஆண்டு ராகேஷ் சர்மா எனும் விமானப்படை வீரர்தான் விண்வெளிக்கு சென்றார். அதன் பிறகு இந்தியர்கள் யாரும் 40 ஆண்டுகளாக விண்வெளிக்கு போகவில்லை. இந்நிலையில்தான் சுபான்ஷு சுக்லா விண்வெளி மையத்திற்கு சென்றிருக்கிறார். கடந்த ஜூன் மாதம் 25ம் தேதி அவர் விண்வெளிக்கு சென்றார். ஆக்சியம் ஸ்பேஸ் எனும் அமெரிக்க தனியார் நிறுவனம்தான் அவரை விண்வெளிக்கு அனுப்பி வைத்தது. நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி முகமை அகியவற்றை சேர்ந்த 3 வீரர்கள் சுபான்ஷு உடன் பறந்தார்.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் க்ரூ டிராகன் விண்கலம்தான் இவர்களை பூமியிலிருந்து 400 கி.மீ உயரத்தில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்திற்கு கொண்டு சேர்த்தது. மொத்தம் 28 மணி நேரம் பயணித்த இந்த விண்கலம் ஜூலை-26ம் தேதிதான் சர்வதேச விண்வெளி மையத்தை சென்றடைந்தது. 18 நாட்கள் இந்த மையத்தில் தங்கி பல்வேறு ஆய்வுகளை சுபான்ஷு மேற்கொண்டிருந்தார். ஜூலை 14ம் தேதி சுபான்ஷு உட்பட 4 வீரர்கள் பத்திரமாக தரையிறங்கினர்.
பொதுவாக விண்வெளிக்கு சென்று வந்தவர்களுக்கு பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படும். ஏனெனில் விண்வெளியில் ஈர்ப்பு விசை கிடையாது. எனவே கண்கள், எலும்புகள் உள்ளிட்டவை பாதிப்புகளுக்கு உள்ளாகியிருக்கும். இதை சரி செய்ய இந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. எனவே அமெரிக்காவில் தங்கி சிகிச்சை பெற்று வந்த சபான்ஷு தற்போது இந்தியா திரும்பியிருக்கிறார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications