மாணவர்கள் மீதான போலீஸ் தாக்குதல் குறித்து பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்? பிரியங்கா காந்தி
டெல்லி: டெல்லியில் ஜாமியா பல்கலைக் கழக மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியது குறித்து பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்? என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான டெல்லி ஜாமியா பல்கலைக் கழக மாணவர்கள் நடத்திய போராட்டம் பெரும் வன்முறையாக வெடித்தது. இதனையடுத்து பல்கலைக் கழகத்துக்குள் நுழைந்து போலீசார் தாக்குதல் நடத்தினர்.

இத்தாக்குதலைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஜாமியா மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் டெல்லி இந்தியா கேட் முன்பு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி திடீரென தர்ணா போராட்டம் நடத்தினார்.
அவருடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஏ.கே. அந்தோணி, அகமது படேல், குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். 2 மணிநேரம் நடைபெற்ற இந்த தர்ணா போராட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பிரியங்கா காந்தி கூறியதாவது:
இளைஞர்களும் மாணவர்களும் நாட்டின் ஆன்மா போன்றவர்கள். அந்த ஆன்மா மீது போலீசார் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஜாமியா பல்கலைக் கழகத்துக்குள் நுழைந்து நூலகம் உள்ளிட்டவற்றை போலீசார் நாசமாக்கியுள்ளனர்.
மாணவர்களுக்கு போராடுகிற உரிமை உள்ளது. நாம் வாழ்வது ஜனநாயக நாட்டில்... சர்வாதிகார நாட்டில் அல்ல. குடியுரிமை சட்ட திருத்தம் மூலம் இந்திய அரசியல் சாசனத்தின் மீது மத்திய அரசு தாக்குதல் நடத்தியுள்ளது.
ஜாமியா மாணவர்கள் மீதான போலீசார் தாக்குதல் குறித்து பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்? இவ்வாறு பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பினார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications