கச்சா எண்ணெய் உயர்வால் ஆட்டோ, டாக்ஸி கட்டணங்கள் உயரும்?.. விழிபிதுங்கும் மக்கள்
Recommended Video
டெல்லி: கச்சா எண்ணெய் உயர்வால் ஆட்டோ, டாக்ஸி கட்டணங்கள் உயர வாய்ப்புள்ளதால் மக்கள் சற்று பீதியில் உள்ளனர்.
சவுதி அரேபியாவில் உள்ள எண்ணெய் உற்பத்தி ஆலையில் கடந்த சனிக்கிழமை ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் தீவிபத்து ஏற்பட்டது. கச்சா எண்ணெய் எரிந்து நாசமானது.

இதனால் எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கச்சா எண்ணெய் உற்பத்தியும் குறைந்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 67 டாலராக உயர்ந்துள்ளது.
இந்த விலை உயர்வால் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் உள்ளது. ரூ .5 வரை உயரும் என்பதால் வாகன ஓட்டிகள் பாதிப்படையும் சூழல் நிலவியுள்ளது. அது போல் பெட்ரோல் , டீசல் விலை உயர்ந்தால் ஆட்டோ, டாக்ஸி, சரக்கு வாகனங்களின் கட்டணங்களும் உயரும் அபாயம் எழுந்துள்ளது.
ஏற்கெனவே பொருளாதார மந்தநிலையால் ஆட்டோமொபைல் துறை சரிந்துள்ள நிலையில் இது போன்ற பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாகன விற்பனை இன்னும் பாதித்து விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications