அயோத்தி வழக்கு.. மத்தியஸ குழு நாளை உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்.. ஆகஸ்ட் 3ல் விசாரணை!
அயோத்தி வழக்கில் அமைக்கப்பட்டு இருந்த மத்தியஸ குழு நாளை உச்ச நீதிமன்றத்தில் மத்தியஸம் குறித்த அறிக்கையை தாக்கல் செய்கிறது.
டெல்லி: அயோத்தி வழக்கில் அமைக்கப்பட்டு இருந்த மத்தியஸ குழு நாளை உச்ச நீதிமன்றத்தில் மத்தியஸம் குறித்த அறிக்கையை தாக்கல் செய்கிறது.
1992ல் பாபர் மசூதி ஆர்எஸ்எஸ் கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. அயோத்தியில் பாபர் மசூதி இருந்து பிடிக்கப்பட்ட இடமான 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்று பிரச்சனைதான் இந்த முக்கிய வழக்கிற்கு காரணம் ஆகும். இது தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
தற்போது அயோத்தி வழக்கு மீண்டும் பரபரப்பான நிலையை அடைந்துள்ளது. நீண்ட நாள் எதிர்பார்ப்பிற்கு பின் அயோத்தி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. அயோத்தி வழக்கு தொடர்பான 14 மேல்முறையீட்டு மனுக்கள், மற்றும் புதிய மனு ஒன்று ஆகியவற்றின் மீதான விசாரணை நடந்து வருகிறது.
இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காக உச்ச நீதிமன்றம் இதில் மத்தியஸ்தர் குழுவை அமைத்தது. மத்தியஸ்தர்கள் மூலம் பிரச்சனையை பேசி தீர்க்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்தது. முன்னாள் நீதிபதி கலிஃபுல்லா தலைமையில் மத்தியஸ்தர் குழு செயல்பட்டு வருகிறது. ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இவர்களுக்கு கடந்த ஜூலை 18ம் தேதி வரை மத்தியசம் பேச அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் அப்போது மத்தியச குழு அறிக்கையை தாக்கல் செய்யவில்லை. மேலும் மத்தியசம் பேச கூடுதல் அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து ஜூலை 31 வரை மத்தியஸம் பேச அவகாசம் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது அயோத்யா வழக்கில் அமைக்கப்பட்டு இருந்த மத்தியஸ குழு நாளை உச்ச நீதிமன்றத்தில் மத்தியஸம் குறித்த அறிக்கையை தாக்கல் செய்கிறது.மத்தியஸத்தில் ஏற்பட்டு இருக்கும் முன்னேற்றம் அல்லது முடிவு குறித்து குழு அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது.
சீல் செய்யப்பட்ட கவரில் அறிக்கையை தாக்கல் செய்கிறது. முன்னாள் நீதிபதி கலிஃபுல்லா, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், ஸ்ரீராம் பஞ்சு குழு அறிக்கையை தாக்கல் செய்கிறது.
இதன்பின் அயோத்யா வழக்கு விசாரணை ஆகஸ்ட் 3ம் தேதி நடக்கும். அதன்பின் தினமும் தினப்படி முறையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், அப்துல் நசீர், அசோக் பூஷன், போப்டி ஆகியோர் அமர்வு இந்த வழக்கை விசாரிக்கும்.