பல நாள் ஆசை.. அயோத்தி மத்தியஸ்தர் குழுவில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்.. இவர் கூறும் தீர்வு இதுதான்!
வாழும் கலை அமைப்பின் தலைவரான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஆசைப்பட்டபடியே தற்போது அயோத்தி வழக்கில் மத்தியஸம் பேச குழு அமைக்கப்பட்டு இருக்கிறது.
டெல்லி: வாழும் கலை அமைப்பின் தலைவரான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஆசைப்பட்டபடியே தற்போது அயோத்தி வழக்கில் மத்தியஸம் பேச குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. அந்த குழுவில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரும் ஒரு உறுப்பினராக நியமிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
அயோத்தி பிரச்சனை தீரவில்லை என்றால், இந்தியா இன்னொரு சிரியாவாக மாறிவிடும் என்று வாழும் கலை அமைப்பின் தலைவரான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் சில நாட்களுக்கு முன் குறிப்பிட்டார். அயோத்தி பிரச்சனையில் நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தை மட்டுமே தீர்வாக இருக்கும் என்று கூறி வந்தவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்.
கடைசியில் அவரே இந்த பேச்சுவார்த்தை குழுவில் நியமிக்கப்பட்டு இருக்கிறார். அயோத்தி தொடர்பான மத்தியஸ்தர் குழுவில் முன்னாள் நீதிபதி கலிஃபுல்லா தலைமையில், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், வழக்கறிஞர் ஸ்ரீராம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

என்ன குறிப்பிட்டார்
அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலத்தை இஸ்லாமியர்கள் விட்டுத்தர வேண்டும். இஸ்லாமிய முறைப்படி பிரச்சனை உள்ள இடத்தில் வழிபாடு நடத்த கூடாது. அதனால் அந்த நிலத்தை மொத்தமாக விட்டுத்தர வேண்டும் என்பதே ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் இந்த பிரச்சனையில் எடுத்து இருக்கும் நிலைப்பாடு என்பது குறிப்பிடத்தக்கது.

சரி கிடையாது
இந்த பிரச்சனையில் இந்துக்களுக்கு எதிரான முடிவை எடுக்க கூடாது. இங்கு இந்துக்கள் அதிகம் பேர் வசிக்கிறார்கள். எதிராக முடிவு எடுத்தால் அது கலவரத்தில் முடியும். இந்துக்களுக்கு ஆதரவான முடிவு மட்டுமே பிரச்னையை சுமூகமாக தீர்க்க உதவும். அதைத்தான் முதலில் செய்ய வேண்டும் என்றும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் என்ன
அதே சமயம் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், இஸ்லாமியர்கள் அந்த இடத்தில் இருந்து 5 கிமீ தொலைவில் மசூதி கட்ட வேண்டும். அதற்கு இந்துக்களும் உதவ வேண்டும். அப்போதுதான் அவர்கள் தோல்வி அடைந்ததாக கருத மாட்டார்கள். அப்போதுதான் இரண்டு பேருக்கும் வெற்றி கிடைக்கும். இவர்களுக்கு இடையில் சமாதானம் பிறக்கும் என்று ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குறிப்பிட்டுள்ளார்.

என்ன எதிர்ப்பு
ஆனால் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு இஸ்லாமிய, இந்து என்று இரண்டு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வருவது குறிப்பிடத்தக்கது. இவர் ஏற்கனவே பலமுறை பேச்சுவார்த்தைக்கு அழைத்த போது, இந்து அமைப்புகள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இப்போது உச்ச நீதிமன்றமே அவரை பேச்சுவார்த்தை குழுவில் இடம்பிடிக்க வைத்துள்ளது.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications