டெல்லி: அயோத்தி வழக்கில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம், இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்ட 5 ஏக்கர் மாற்று இடம் தரலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. அரசியல் சாசன அமர்வில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், அப்துல் நசீர், அசோக் பூஷன், போப்டி ஆகியோர் ஒரே தீர்ப்பை வழங்கி உள்ளனர்.
Nov 09, 2019, 6:15 pm IST
உச்சநீதிமன்றத்தின் அயோத்தி தீர்ப்பு மூலம் நாட்டில் புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது- பிரதமர் மோடி
Nov 09, 2019, 6:15 pm IST
இந்திய நீதித்துறை வரலாற்றில் இன்று பொன்னாள்.
புதிய இந்தியாவில் எதிர்மறை எண்ணங்களுக்கு இடம் இல்லை- மோடி.
Nov 09, 2019, 6:09 pm IST
நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக் கொண்டிருப்பது நமது சகிப்பு தன்ன்மையை வெளிப்படுத்தியிருக்கிறது
Nov 09, 2019, 6:03 pm IST
டெல்லி
நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்
மாலை 6 மணிக்கு நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்றுகிறார் மோடி.
அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில் மோடி உரை.
Nov 09, 2019, 4:47 pm IST
அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம், சீராய்வு வழக்கு தாக்கல் இல்லை- சன்னி வக்ஃபு வாரியம் அறிக்கை
Nov 09, 2019, 1:05 pm IST
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட காங்கிரஸ் ஆதரவு.
உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில் காங்கிரஸ் கருத்து.
Nov 09, 2019, 1:02 pm IST
அயோத்தி நில உரிமை வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு யாருக்கும் வெற்றியும் அல்ல.. தோல்வியும் அல்ல- பிரதமர் மோடி
Nov 09, 2019, 12:26 pm IST
அயோத்தி
அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த 1045 பக்க தீர்ப்பு வெப்சைட்டில் வெளியானது
Nov 09, 2019, 11:40 am IST
5 ஏக்கர் நிலம் எங்களுக்கு மதிப்புடையது இல்லை- சன்னி வக்ஃப் வாரியம் அறிவிப்பு
Nov 09, 2019, 11:40 am IST
உச்சநீதிமன்ற தீர்ப்பில் முரண்பாடுகள் இருப்பதால் மேல்முறையீடு செல்வோம்- சன்னி வக்ஃப் வாரியம்
Nov 09, 2019, 11:26 am IST
சர்ச்சைக்குரிய இடம் ராம் ஜென்ம பூமி நியாசுக்கு சொந்தம்- உச்சநீதிமன்றம் தீர்ப்பு
Nov 09, 2019, 11:25 am IST
வஃக்பு வாரியம் ஏற்கும் இடத்தில் 5 ஏக்கர் நிலம் தர மத்திய, உத்தர பிரதேச மாநில அரசுகளுக்கு உத்தரவு
Nov 09, 2019, 11:25 am IST
சர்ச்சைக்குரிய இடத்தில் கோயில் கட்டுவதற்கு அறங்காவலர் குழுவை அமைக்க வேண்டும்
Nov 09, 2019, 11:25 am IST
அயோத்தில் கோவில் கட்ட 3 மாதங்களில் மத்திய அரசு ஒரு திட்டத்தை உருவாக வேண்டும்: உச்சநீதிமன்றம்
Nov 09, 2019, 11:18 am IST
மசூதி இடிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலததில் ராமர் கோவில் கட்ட அனுமதி
Nov 09, 2019, 11:17 am IST
புதிய மசூதி கட்ட 5 ஏக்கர் நிலத்தை முஸ்லீம்களுக்கு வழங்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
Nov 09, 2019, 11:17 am IST
சர்ச்சைக்குரிய இடம் ராம் ஜென்ம பூமி நியாசுக்கு சொந்தம்- உச்சநீதிமன்றம் தீர்ப்பு
Nov 09, 2019, 11:17 am IST
வஃக்பு வாரியம் ஏற்கும் இடத்தில் 5 ஏக்கர் நிலம் தர மத்திய, உத்தர பிரதேச மாநில அரசுகளுக்கு உத்தரவு
Nov 09, 2019, 11:17 am IST
சர்ச்சைக்குரிய இடத்தில் கோயில் கட்டுவதற்கு அறங்காவலர் குழுவை அமைக்க வேண்டும்
Nov 09, 2019, 11:17 am IST
அயோத்தில் கோவில் கட்ட 3 மாதங்களில் மத்திய அரசு ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்
Nov 09, 2019, 11:16 am IST
மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி
Nov 09, 2019, 11:12 am IST
அயோத்தி நிலத்தை 3ஆக பிரித்து கொடுத்தது தவறு- உச்சநீதிமன்றம்.
மசூதி கட்ட சன்ன வக்ஃபு வாரியத்திற்கு மாற்று நிலம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு.
Nov 09, 2019, 11:11 am IST
உள் பகுதியில் முஸ்லிம்களும், வெளி முற்றத்தில் இந்துக்களும் பிரார்த்தனை செய்தனர் என்பது தெளிவாக நிறுவப்பட்டுள்ளது: உச்சநீதிமன்றம்
Nov 09, 2019, 11:11 am IST
முஸ்லிம்கள் உள் பகுதியில் தொடர்ந்து தொழுகை நடத்தினர், முஸ்லிம்கள் மசூதியை கைவிடவில்லை- உச்சநீதிமன்றம்
Nov 09, 2019, 11:11 am IST
ராமரின் பிறப்பிடம் மசூதி அமைந்துள்ள உள் பகுதியில் இருப்பதாக இந்துக்கள் முழுமையாக நம்புகிறார்கள்- உச்சநீதிமன்றம்
Nov 09, 2019, 11:11 am IST
அயோத்திதான் ராமர் பிறந்த இடம் என்பதை இந்துக்கள் உறுதியாக நம்புகிறார்கள்
Nov 09, 2019, 11:11 am IST
பாபர் மசூதி இருந்த இடம் முழுக்க முழுக்க தங்களுடையது என்று முஸ்லீம் அமைப்பால் நிரூபிக்க முடியவில்லை- உச்சநீதிமன்றம்
Nov 09, 2019, 10:58 am IST
மதசார்பின்மை இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படைத்தன்மை என தலைமை நீதிபதி கருத்து
Nov 09, 2019, 10:57 am IST
ஒருவர் மத நம்பிக்கையில் மற்றொருவர் தலையிட கூடாது- தலைமை நீதிபதி
READ MORE
9:31 PM, 8 Nov
அயோத்தி வழக்கில் நாளை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது ;
தீர்ப்பை அடுத்து நாடு முழுக்க பாதுகாப்பு அதிகரிப்பு
9:34 PM, 8 Nov
அயோத்தி வழக்கு: நாளை தீர்ப்பு வர உள்ளதால் நாடு முழுக்க பாதுகாப்பு அதிகரிப்பு
அயோத்தியில் கூடுதல் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்
உத்தர பிரதேசம் முழுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
9:58 PM, 8 Nov
சென்னை
தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் குவிப்பு. அயோத்தி வழக்கில் தீர்ப்பு வரவுள்ளதால் நடவடிக்கை
9:59 PM, 8 Nov
தமிழகத்தில் நாளை நடைபெற இருந்த காவலர் உடல் தகுதி தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
9:59 PM, 8 Nov
லக்னோ
உத்தர பிரதேசத்தில் நாளை பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி மையங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை
10:31 PM, 8 Nov
லக்னோ
நாளை தீர்ப்பு வருவதை அடுத்து உத்தர பிரதேசத்தில் பல்வேறு அடுக்குகளாக பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இதற்காக 4000 பாராமிலிட்டரி படைகள் உத்தர பிரதேசத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகிறார்கள்
10:32 PM, 8 Nov
டெல்லி
அயோத்தி வழக்கில் தீர்ப்பு வர உள்ளதால் மாநிலங்களில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது
10:32 PM, 8 Nov
லக்னோ
அயோத்தியை நோக்கி செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டுள்ளது. சாலை போக்குவரத்து அங்கு தடை செய்யப்பட்டுள்ளது
10:32 PM, 8 Nov
டெல்லி
அயோத்தி வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் 40 நாட்கள் நடந்தது குறிப்பிடத்தக்கது
10:38 PM, 8 Nov
டெல்லி
அயோத்தி வழக்கு 40 நாட்கள் உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கில் விசாரணை மிகவும் விறுவிறுப்பாக சென்றது. விடுமுறை தவிர்த்து மற்ற அனைத்து நாட்களும் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது
10:47 PM, 8 Nov
டெல்லி
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், அப்துல் நசீர், அசோக் பூஷன், போப்டி ஆகியோர் அமர்வு இந்த தீர்ப்பை வழங்க உள்ளனர்
10:47 PM, 8 Nov
டெல்லி
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயின் பதவிக்காலம் நவம்பர் 17ம் தேதி முடிய உள்ள நிலையில் நாளை தீர்ப்பு
10:47 PM, 8 Nov
டெல்லி
அயோத்தி வழக்கில் தீர்ப்பு நாளை வர உள்ள நிலையில், இன்று காலைதான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உபி, மாநில தலைமை செயலாளருடன் அம்மாநில பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை செய்தார்.
10:48 PM, 8 Nov
டெல்லி
1992ல் பாபர் மசூதி ஆர்எஸ்எஸ் கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. அயோத்தியில் பாபர் மசூதி இருந்து இடிக்கப்பட்ட இடமான 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பதுதான் வழக்கின் நோக்கம்
10:48 PM, 8 Nov
டெல்லி
அயோத்தி வழக்கில் சர்ச்சைக்குரிய 2 .77 ஏக்கர் நிலத்தை மனுதாரர்கள் பிரித்துக் கொள்ள வேண்டும் என்று அலஹாபாத் நீதிமன்றம் கூரியது. இதை எதிர்த்து சன்னி வக்பு வாரியம், நிரோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 பிரிவினரும் உச்ச நீதிமன்றம் சென்றனர்
10:49 PM, 8 Nov
டெல்லி
அயோத்தி வழக்கு தொடர்பான 14 மேல்முறையீட்டு மனுக்கள் மற்றும் புதிய மனு ஒன்று ஆகியவற்றின் மீதான விசாரணை நடந்து வந்தது
10:49 PM, 8 Nov
டெல்லி
அயோத்தி வழக்கில் கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி முன்னாள் நீதிபதி கலிஃபுல்லா தலைமையில் மத்தியஸ்தர் குழு அமைக்கப்பட்டது. ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றனர்
10:49 PM, 8 Nov
டெல்லி
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த சமரசம் தோல்வியில் முடிந்தது. சமரச முயற்சி தோல்வி அடைந்துவிட்டதாக மூவர் குழு தெரிவித்துள்ளது, இதையடுத்து வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது
10:52 PM, 8 Nov
கர்நாடகாவில் நாளை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு
10:53 PM, 8 Nov
டெல்லி
அயோத்தி தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அது யாருக்கும் வெற்றியும் இல்லை. தோல்வியும் இல்லை - பிரதமர் நரேந்திர மோடி
10:53 PM, 8 Nov
டெல்லி
இந்த தீர்ப்புக்காக நாடு மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறது. தீர்ப்பை நல்ல முறையில் எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை அனைத்துத் தரப்பினரும் எடுத்திருப்பது பாராட்டுக்குரியது
10:53 PM, 8 Nov
டெல்லி
நாட்டின் நலனையும், நீதித்துறையின் மாண்பையும் மனதில் கொண்டு அனைத்துத் தரப்பினரும் இந்த தீர்ப்பை ஒருமனதார வரவேற்க வேண்டும்.
10:54 PM, 8 Nov
டெல்லி
உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு அனைவரும் ஒருமித்த உணர்வுடன், நல்லிணக்கத்தைப் பேணிக் காக்கும் வகையில் செயல்பட வேண்டும்.
10:54 PM, 8 Nov
டெல்லி
இந்த தீர்ப்பை யாரும் வெற்றியாகவும் எடுத்துக் கொள்ளக் கூடாது. தோல்வியாகவும் எடுத்துக் கொள்ளக் கூடாது. இது நமது நாட்டின் மாபெரும் பாரம்பரியம், அமைதி , ஒற்றுமை, நல்லெண்ணத்தைப் பாதுகாப்பதாக இருக்க வேண்டும், அதை நாம் அனைவரும் மேலும் பலப்படுத்தும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் - மோடி
10:55 PM, 8 Nov
ம.பி.
போபால் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல்- தனியார் மற்றும் அரசு பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
11:13 PM, 8 Nov
ஶ்ரீநகர்
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை- ஜம்முவின் 10 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு அமல்
6:24 AM, 9 Nov
டெல்லி
அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படுகிறது
7:13 AM, 9 Nov
கர்நாடகா
அயோத்தி தீர்ப்பையொட்டி கர்நாடகா முழுவதும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
7:13 AM, 9 Nov
கர்நாடகா
மாநிலம் முழுக்க மதுபான கடைகளும் மூடப்படும் என்று அரசு உத்தரவு
7:13 AM, 9 Nov
அலிகார்
உ.பி. அலிகார் மாவட்டத்தில் மட்டும் இணையசேவைகள் முடக்கப்பட்டுள்ளன.