அயோத்தி தீர்ப்பு- ஆர்.எஸ்.எஸ்., முஸ்லிம் தலைவர்களுடன் மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி ஆலோசனை
டெல்லி: அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க இருக்கும் நிலையில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் முஸ்லிம் தலைவர்களுடன் மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி இன்று டெல்லியில் ஆலோசனை நடத்தினார்.
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிலத்தை சன்னி வக்ஃபு வாரியம், ராம் லல்லா மற்றும் நிர்மோனி அகாடா ஆகிய 3-ம் சரிசமமாக பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்பது 2010-ல் அலாகாபாத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தக்கல் செய்யப்பட்டன.

இம்மனுக்கள் மீது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரணை நடத்தி தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன்ன் கோகாய் வரும் 17-ந் தேதி ஓய்வு பெற உள்ளார்.
ஆகையால் அதற்கு முன்னதாக அயோத்தி உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் தீர்ப்புகளை ரஞ்சன் கோகாய் வழங்கக் கூடும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி டெல்லியில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் முஸ்லிம் மதகுருக்களுடன் இன்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.
இக்கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சானவாஸ் ஹூசேன் மற்றும் திரைத்துறையின் முசாஃபர் அலி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications