நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்! குவைத் இளவரசருக்கு பிரதமர் மோடி சர்ப்ரைஸ்
டெல்லி: தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை நாடு முழுவதும் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. குவைத்தின் பட்டத்து இளவரசருக்கும் குவைத் மக்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி பக்ரீத் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
இஸ்லாமிய இறைதூதர்களில் ஒருவரான இப்ராகிம் நெடுநாட்களுக்கு பிறகு தமக்கு பிறந்த மகன் இஸ்மாயிலை கனவில் கிடைத்த இறைவனின் கட்டளையை மதித்து உயிர்ப்பலி கொடுக்கத் துணிந்தார். தமக்காக மகனையே தியாகம் செய்யத் துணிந்த இறைதூதரை எண்ணி வியந்த இறைவன், உடனடியாக வானவரை அனுப்பி இஸ்மாயில் பலிகொடுக்கப்படும் நிகழ்வை தடுத்து நிறுத்தியதுடன், அதற்குப் பதிலாக ஆட்டைக் கொடுத்து பலியிடும்படி கேட்டுக் கொண்டார். இறைதூதர் இப்ராகிமின் தியாக உள்ளத்தைப் பாராட்டும் விதமாகவே உலகம் முழுவதும் பக்ரீத் கொண்டாடப்பட்டு வருகிறது.

இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவ வேண்டும். அண்டை வீட்டாருடன் நல்லுறவை பாராட்ட வேண்டும் என்பதை இந்த திருநாள் வலியுறுத்துகிறது. அதற்காகத்தான் ஆடு, மாடு ஒட்டகம் போன்றவற்றை பலியிடுவதன் மூலம் கிடைக்கும் இறைச்சியை மூன்று சம பங்குகளாக பிரித்து, ஒரு பங்கை அண்டை வீட்டாருக்கும், நண்பர்களுக்கும் மற்றொரு பங்கை ஏழைகளுக்கும் கொடுத்துவிட்டு மூன்றாவது பங்கை தங்கள் தேவைகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்று பக்ரீத் வலியுறுத்துகிறது.
பக்ரீத் பண்டிகையையொட்டி இன்று அதிகாலையில் டெல்லியில் உள்ள ஜமா மசூதியில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். டெல்லி மட்டுமல்லாது மும்பை, கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட பெரு நகரங்களிலும் பக்ரீத் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. தொழுகை முடிந்த பின்னர் ஒருவரையொருவர் கட்டியணைத்து பக்ரீத் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
அதேபோல குவைத் நாட்டின் பட்டத்து இளவரசருக்கும், குவைத் மக்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி பக்ரீத் வாழ்த்துக்களை பகிர்ந்துக்கொண்டதாக இந்திய தூதரகம் ட்வீட் செய்துள்ளது. இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் இன்று பக்ரீத் கொண்டாடப்படுகிறது.
பக்ரீத் பண்டிகையையொட்டி டெல்லியில் உள்ள அனைத்து மசூதிகளுக்கும் உச்சகட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேற்றிரவு முதல் காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். பண்டிகையன்று எவ்வித அசம்பாவிதங்களும் நடக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாக டெல்லியின் சிறப்பு கமிஷ்னர் தீபேந்தர் பதக் கூறியுள்ளார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications