வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த அறிவிப்பு.. தொடர்ந்து 3 நாட்கள் வங்கி பணிகள் பாதிக்கும் அபாயம்
டெல்லி: ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் வரும் 31ம் தேதி மற்றும் 1ம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். இதனால் தொடர்ந்து மூன்று நாட்கள் வங்கி சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வங்கி ஊழியர்கள் சங்கம் தங்களுக்கு 15 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. இதை ஏற்க இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் மறுத்துவிட்டது.அத்துடன் 12.25 சதவீத உயர்வு மட்டுமே வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

இது தொடர்பாக கடந்த 13ம் தேதி வங்கி ஊழியர்கள் மற்றும் நிர்வாகங்கள் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதையடுத்து வரும் 31ம் தேதி மற்றும் பிப்ரவரி 1ம் தேதி வேலை நிறுத்ததில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.
31ம் தேதி வெள்ளிக்கிழமையும், 1ம் தேதி சனிக்கிழமையும், 2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கம் போல் விடுமுறையாகும். எனவே வங்கி ஊழியர்கள் சங்கத்தினரின் வேலை நிறுத்தத்தால் 3 நாட்கள் வங்கி சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.
அத்துடன் மாத கடைசி மற்றும் முதல் தேதிகள் என்பதால் சம்பளம் வழங்கும் பணிகள் கூட பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் ஏராளமான மக்களை நேரடியாக பாதிக்கப்படும் நிலை ஏற்படலாம்.
இதனிடையே கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஏப்ரல் 1 முதல் காலவரையற்ற வேலைநிறுத்ததில் ஈடுபடபோவதாகவும் வங்கி ஊழியர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications