நிர்மலா சீதாராமன் சூப்பர் அறிவிப்பு.. வீடு வாங்குவோர்.. சிறு தொழில் செய்வோர் பயன்படுத்திக்கங்க!
Recommended Video
டெல்லி: சிறு குறு தொழில் நிறுவனம் வைத்துள்ளவர்கள், விவசாயிகள் மற்றும் வீடு வாங்க ஆசைப்படுபவர்களுக்கு நாடு முழுவதும் 400 மாவட்டங்களில் கடன் வழங்கும் முகாம் வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
பொருளாதார மந்தநிலையை சீர்செய்யும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை மத்தியஅமைச்சர் நிர்மலா சீதாராமன் எடுத்து வருகிறார். அந்த வகையில் வியாழக்கிழமை மாலை நாட்டில் பணப்புழகத்தை அதிகரிப்பது குறித்து பொதுத்துறை வங்கிகள் மற்றும் வங்கி சாராத நிதி நிறுவனங்களின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன், நாடு முழுவதும் 400 மாவட்டங்களில் கடன் வழங்கும் முகாம் நடத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.

நாடு முழுவதும் கடன் மேளா
நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாகூரின் மேற்பார்வையில் 200 , 200 மாவட்டங்களாக கடன் வழங்கும் முகாம் நடைபெற உள்ளதாகவும், இந்த கடன் வழங்கும் முகாம்கள் செப்டம்பர் 24ம் தேதி தொடங்க உள்ளது என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.

அக்டோபர் 10ல் 200 மாவட்டங்கள்
இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், "வங்கிகளும், வங்கி சாராத நிதி நிறுவனங்களும் பணப்புழகத்தை அதிகரிக்க செப்டம்பர் 24ம் தேதி முதல் செப்டம்ர் 29 ம் தேதி வரை நாட்டின் 200 மாவட்டங்களில் கடன் வழங்கும் முகாம்களை நடத்தும். அதன் பிறகு இரண்டாம் கட்டமாக 200 மாவட்டங்களில் அக்டோபர் 10ம் தேதி முதல் அக்டோர்ப 15ம் தேதி வரை கடன் வழங்கும் முகாம் நடக்கும்,

பணம் வேண்டுமா வாங்க
சிறு குறு தொழில் நிறுவனங்கள் வைத்துள்ளவர்கள், விவசாயிகள், வீடு வாங்க ஆசைப்படுவோர், கார் உள்ளிட் வாகனங்கள் வாங்க விரும்புவோர். இடம் வாங்க விரும்புவோர் என பணம் தேவைப்படுவோர் இந்த கடன் முகாம்களில் கலந்து கொண்டு உடனடியாக கடன் பெறலாம்.

கடன் யாருக்கு கிடைக்கும்
இந்த கடன் வழங்கும் முகாமில் கடன் பெற விரும்பும் ஒரு பழைய வாடிக்கையாளர் (ஏற்கனவே கடன் வாங்கியவர்கள்)- ஐந்து புதிய வாடிக்கையாளர்கள் என்ற விகிதத்தில் கடன்கள் வழங்குமாறு வங்கிகளை கேட்டுக்கொண்டுள்ளோம்.

ஆறுதல் அறிவிப்பு
இதேபோல் கடன் வாங்கி கட்ட முடியாமல் உள்ள சிறுகுறு நிறுவனங்களின் சொத்துக்களை செயல்படாத சொத்துக்களாக மார்ச் 31 2020வரை அறிவிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளோம்" இவ்வாறு கூறினார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications