Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

5,000 ஆண்டுகளாக "பாரத்" ஒரு "மதச்சார்பற்ற" நாடு.. சொல்வது ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாரத் (பாரதம்) எனும் இந்த நாடு 5,000 ஆண்டுகளாக "மதச்சார்பற்ற நாடாக" திகழ்கிறது என பெருமிதம் தெரிவித்துள்ளார் மத்தியில் ஆளும் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத்.

மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இணைந்து "இந்தியா" அல்லது "இண்டியா" கூட்டணியை உருவாக்கி உள்ளன. இதனால் "இந்தியா" என்ற பெயரை பயன்படுத்துவதையே பிரதமர் மோடி முதல் பெரும்பாலான பாஜக தலைவர்கள் தவிர்த்து வருகின்றனர். இப்போது "இந்தியா" என்ற பெயரே பாஜகவினரின் கடுமையான விமர்சனங்களுக்குள்ளாகி வருகிறது.

Bharat- A Secular Nation For 5,000 Years: RSS Chief Mohan Bhagwat

அத்துடன் நிற்காமல், "இந்தியா"வுக்கு பதில் "பாரத்" (பாரதம்) என்ற சொல்லையும் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி தொடங்கி அனைத்து மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஒரு கட்டத்தில் நாட்டின் பெயரையே "இந்தியா" என்பதற்கு பதில் "பாரத்" என மாற்றப் போகிறார்களோ? என்கிற அச்சமும் எழுந்தது. அதற்காகத்தான் திடீரென "நாடாளுமன்ற சிறப்பு கூட்டம்" கூட்டப்பட்டதா? என்கிற விவாதமும் நடந்தது. தற்போது "இந்தியா" "பாரத்" விவகாரம் கிடப்பில் கிடக்கிறது.

Bharat- A Secular Nation For 5,000 Years: RSS Chief Mohan Bhagwat

இதனிடையே டெல்லியில் ஆர்.எஸ்.எஸ். மூத்த செயற்பாட்டாளர் ரங்கா ஹரி எழுதிய "'Prithvi Sookta - An Ode To Mother Earth" என்ற நூல் வெளியீட்டு விழா டெல்லியில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத், நமது தேசிய ஒற்றுமைக்கு நம்முடைய தாய்நாடு முதன்மையானது. இந்த பாரத் (பாரதம்) 5,000 ஆண்டுகளாக மதச்சார்பற்ற ஒரு நாடாக திகழ்கிறது. ஒட்டுமொத்த உலகமும் ஒரே குடும்பம். இதுதான் நமது உணர்வு. இதுதான் நமது தத்துவம்.

Bharat- A Secular Nation For 5,000 Years: RSS Chief Mohan Bhagwat

பாரதத்தில் பல்வேறு வேற்றுமைகள் உண்டு. ஆனால் நாம் ஒருவருக்கு ஒருவர் மோதிக் கொள்ளக் கூடாது. நாம் அனைவரும் ஒன்று என்கிற ஒற்றுமையைத்தான் உலகத்துக்கு ஒரு பாடமாக சொல்ல வேண்டும். இந்தியா இருக்கும் வரை இத்தகைய ஆன்ம உணர்வும் இருக்க வேண்டும். கடைசி மனிதனும் அறிவைப் பெற வேண்டும் என்பதற்காக சன்னியாசிகள் இந்த பாரதத்தை உருவாக்கினர். உலகத்தின் நன்மைக்காகவே பாரதம் படைக்கப்பட்டது. அவர்கள் சன்னியாசிகள் மட்டுமல்ல. இந்த மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் பாடுபட்டவர்கள். ஆங்கிலேயர் ஆட்சியில் குற்ற பழங்குடிகளாக பிரகடனப்படுத்தப்பட்டவர்கள். இவ்வாறு மோகன் பகவத் கூறினார். இந்த நிகழ்ச்சியில் கேரளா ஆளுநர் ஆரிப் முகமது கான் பங்கேற்றார்.

Bharat- A Secular Nation For 5,000 Years: RSS Chief Mohan Bhagwat
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+