எதிர்க்கட்சிகள் முகத்தில் திகிலடித்த நிதிஷ்குமார்!”இந்தியா” அணியில் ஏகப்பட்ட பாஜக ஸ்லீப்பர் செல்கள்?
டெல்லி: பாஜக நிறுவனத் தலைவரும் முன்னாள் பிரதமருமான அடல் பிகாரி வாஜ்பாய் நினைவிடத்தில் பீகார் முதல்வரும் "இந்தியா" கூட்டணியின் முக்கிய கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவருமான நிதிஷ்குமார் அஞ்சலி செலுத்தியது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.
2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கான எதிர்க்கட்சிகளின் "இந்தியா" கூட்டணியை உருவாக்கியவர்களில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் முக்கியமானவர். இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக சென்று எதிர்க்கட்சிகளின் தலைவர்களை சந்தித்து "இந்தியா" கூட்டணி உருவாக காரணமாக இருந்தவர் நிதிஷ்குமார். "இந்தியா" கூட்டணியின் முதல் கூட்டத்தை பீகார் மாநிலம் பாட்னாவில் வெற்றிகரமாக நடத்தியும் காட்டினார் நிதிஷ்குமார்.

ஆனாலும் நிதிஷ்குமார், பாஜக கூட்டணிக்கே திரும்ப வந்துவிடுவார்; அப்படி வந்தாலும் அவருக்கு கதவுகளை ஒருபோதும் திறக்கவே மாட்டோம்; அவருக்கு அப்படி என்ன செல்வாக்கு இருக்கிறது? எங்க தயவில்தான் பீகார் சட்டசபை தேர்தலில் ஜெயித்தார்.. அவருக்கு என எந்த தனிப்பட்ட செல்வாக்குமே இல்லை என விளாசிக் கொண்டிருக்கிறது பாஜக.
இந்நிலையில் திடீரென டெல்லிக்கு வந்த நிதிஷ்குமார், பாஜகவின் நிறுவனத் தலைவரான முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அப்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவர்களும் வாஜ்பாய் நினைவிடத்தில் குழுமி இருந்தனர். இந்தியா கூட்டணியின் முக்கிய கட்சித் தலைவர், வாஜ்பாய் நினைவிடத்துக்கு நேரில் வந்து மரியாதை செலுத்தியது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.
#WATCH | Bihar CM Nitish Kumar pays tribute to former Prime Minister Atal Bihari Vajpayee on his death anniversary, at 'Atal Samadhi Sthal' in Delhi. pic.twitter.com/iYtcGhcYze
— ANI (@ANI) August 16, 2023
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ்குமார், வாஜ்பாய் நினைவு தினத்தை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்த இங்கே வருகை தந்தேன். வாஜ்பாயுடன் இணைந்து பணியாற்றியதை நான் எப்போது மறக்க முடியாது. பீகார் மாநில முதல்வராக நான் முதல் முறையாக பதவியேற்ற போது வாஜ்பாய் வருகை தந்திருந்தார் என்றார்.
"இந்தியா" கூட்டணியில் இருந்து ஏற்கனவே தேசியவாத காங்கிரஸை ஒட்டுமொத்தமாக கழற்றிவிடுவதற்காக சரத்பவாருடன் பல பேரங்களை பாஜக தரப்பு பேசி வருகிறது. "இந்தியா" கூட்டணியின் மும்பை கூட்டம் நடைபெறும் போது சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி என்ன முடிவு எடுக்குமோ என திகிலில் உறைந்து கிடக்கின்றனர் எதிர்க்கட்சி தலைவர்கள். இப்போது சரத்பவாரைத் தொடர்ந்து வாஜ்பாய் நினைவிடத்துக்குப் போய் "இந்தியா" கூட்டணிக்கு மற்றொரு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார் நிதிஷ்குமார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications