பாஜக வேட்பாளரை புரட்டி எடுத்த.. திரிணாமுல் தொண்டர்கள்! மேற்கு வங்கத்தில் உச்சக்கட்ட பதற்றம்!
டெல்லி: மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பாஜக வேட்பாளர் ஒருவரை திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் சரமாரியாக தாக்கியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மேற்கு வங்கத்தின் தட்சிண் தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள குமார்கஞ்ச் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுவேந்து சர்க்கார் தாக்கப்பட்டிருக்கிறார்.

தெறிக்கவிட்ட திரிணாமுல்
குமார்கஞ்ச் தொகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள், வாக்குச்சாவடியை கைப்பற்ற முயற்சிப்பதாகவும், பாஜக ஏஜென்ட்களை உள்ளே அனுமதிக்கவில்லை என்றும் சுவேந்து சர்க்காருக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. இந்தத் புகாரை விசாரிக்கத் தனது பாதுகாவலருடன் அவர் அந்த இடத்திற்குச் சென்றார். அப்போது அங்கிருந்த கும்பல் அவரைச் சூழ்ந்துகொண்டு கற்களாலும், கட்டைகளாலும் தாக்கத் தொடங்கியது.
தெறித்து ஓடிய பாஜக வேட்பாளர்
இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத அவர், உயிருக்கு பயந்து தனது பாதுகாவலருடன் தெறித்து ஓடியிருக்கிறார். இது தொடர்பான வீடியோக்கள் சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகிறது. "திரிணாமுல் காங்கிரஸ் பயந்துவிட்டது, அதனால்தான் என்னைச் சுற்றி வளைத்து தாக்குகிறார்கள்" என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பூத் கேப்சரிங்
மேலும் அவர் கூறியதாவது, "திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குண்டர்கள் 8 முதல் 10 வாக்குச்சாவடிகளில் பாஜக முகவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ளனர். தான் தலையிட்டு மீண்டும் அவர்களை உள்ளே அனுப்பியதால் ஆத்திரமடைந்த கும்பல் தன்னைத் தாக்கியது. இந்த விஷயத்தில் போலீசார் ஒருதலைப்பட்சமாகச் செயல்படுகின்றனர். பாதுகாப்பு படையினர் போதுமான அளவில் இல்லை" என்று கூறியிருக்கிறார்.
தேர்தல் ஆணையம்
இந்தச் சம்பவம் குறித்துத் தேர்தல் ஆணையம் அறிக்கை கேட்டுள்ளது. காயமடைந்த பாஜக ஏஜென்ட் பிஸ்வஜித் மண்டல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லவ்பூர் மற்றும் குமார்கஞ்ச் பகுதிகளில் பதற்றம் நிலவுவதால் கூடுதல் பாதுகாப்புப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன.
முன்னதாக நேற்றிரவு திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் ஹுமாயூன் கபீர் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்திருந்தது. இன்று காலை வரை இரு தரப்பினர் சண்டையிட்டு வந்தனர்.
VIDEO | West Bengal election: BJP candidate from South Dinajpur manhandled allegedly by TMC workers even as a security person tries to protect him. #AssemblyPollsWithPTI #WestBengalPollsWithPTI
— Press Trust of India (@PTI_News) April 23, 2026
(Full video available on PTI Videos - https://t.co/n147TvrpG7) pic.twitter.com/NeCAxYA08p
மோதல் சூழல்
நேற்று முர்ஷிதாபாத்தில் சிவநகர் ஆரம்பப் பள்ளி அருகே நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டதில் ஒருவர் காயமடைந்தார். இதனையடுத்தே இரு தரப்புக்கும் இடையில் மோதல் வெடித்தது. குண்டு வீச்சால் பாதிக்கப்பட்ட நபர், இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் ஹுமாயூன் கபீர் (AUJP நிறுவனர்) கட்சியினர் இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இந்த மோதல் காரணமாக முர்ஷிதாபாத்தில் பதற்றம் நிலவியது. நிலைமையைக் கட்டுப்படுத்த போலீசார் லேசான தடியடி நடத்தினர்.
இப்படி தேர்தல் நடக்கும் நேரத்தில் தொடர்ந்து கலவரங்கள் ஏற்பட்டிருப்பதால், மேற்கு வங்கத்தில் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது.














Click it and Unblock the Notifications