இடைத் தேர்தல்.. காங். கோட்டையை தவிடு பொடியாக்கிய பாஜக.. 41 தொகுதிகளில் 31ல் அபார வெற்றி!
டெல்லி: இந்தியாவில் நிகழ்ந்த 11 மாநில இடைத்தேர்தல்களில் 7 மாநிலங்களில் மொத்தம் உள்ள 59 தொகுதிகளில் 41 தொகுதிகளை பாஜக கைப்பற்றியுள்ளது. இதில் என்ன சுவாரஸ்யம் என்றால் அந்த 41 தொகுதிகளில் 31 தொகுதிகள் காங்கிரஸ் வசம் இருந்தவை ஆகும்.
மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம், மணிப்பூர், ஹரியானா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், கர்நாடகா, நாகாலாந்து, ஒடிஸா, தெலுங்கானா, குஜராத் ஆகிய 11 மாநிலங்களில் இடைத்தேர்தல்கள் நடந்து முடிந்தன.

இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்றைய தினம் நடந்து முடிந்தது. இந்த இடைத்தேர்தல்களில் 7 மாநிலங்களுக்கான இடைத்தேர்தல்களில் மொத்தம் இருந்த 59 இடங்களில் பாஜகவோ அல்லது அதன் கூட்டணி கட்சியோ 41 இடங்களை வென்றுள்ளன.
இதில் 31 தொகுதிகள் காங்கிரஸிடம் இருந்து கைப்பற்றப்பட்டன. அதிலும் மத்திய பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் மட்டும் 26 தொகுதிகளை காங்கிரஸிடம் இருந்து கைப்பற்றியுள்ளன.
மத்திய பிரதேச இடைத்தேர்தலில் 28 தொகுதிகளில் 19 தொகுதிகளை பாஜகவும் 9 தொகுதிகளை காங்கிரஸும் கைப்பற்றியுள்ளன. அது போல் குஜராத்தில் 8 தொகுதிகளில் மொத்த தொகுதிகளையும் பாஜக கைப்பற்றியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் 7 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தல்களில் பாஜக 6 தொகுதிகளையும் சமாஜ்வாதி கட்சி ஒரு தொகுதியையும் பிடித்தது. மணிப்பூரில் 5 இடங்களில் 4 இடங்களை பாஜக பிடித்துள்ளது. மற்றொரு தொகுதியை சுயேச்சை வேட்பாளர் கைப்பற்றியுள்ளார்.
எனவே இந்த முறை இடைத்தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி அடிவாங்கியுள்ளது , அவரது கட்சியினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications