"9 மாநில அரசை கவிழ்த்துள்ளனர்! ஆனா மணிப்பூரை கவனிக்கல.." பாயிண்ட் பாயிண்டாக விளாசிய சுப்ரியா சுலே
டெல்லி: மத்திய அரசின் மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய திரிணாமுல் எம்பி சுப்ரியா சுலே, பாஜகவை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மூன்று மாதங்களாக வன்முறை உச்சத்தில் இருக்கிறது. இந்த 3 மாதங்களாகவே அங்கு மிக மோசமான வன்முறை, கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் அரங்கேறின.

மணிப்பூர் வன்முறை தடுக்க அம்மாநில பாஜக அரசு தவறிவிட்டதாகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இதனிடையே மணிப்பூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து வந்த "இந்தியா" கூட்டணி எம்பிக்கள் மணிப்பூரில் இன்னுமே முழுமையாக அமைதி திரும்பவில்லை என்றனர்.
நம்பிக்கையில்லா தீர்மானம்: இதற்கிடையே மணிப்பூர் வன்முறை விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் "இந்தியா" கூட்டணி இணைந்து நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தது. இதற்கிடையே இந்த தீர்மானம் மீது இன்று விவாதம் நடந்த நிலையில், முதலில் இந்த விவாதத்தில் ராகுல் காந்தி பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், பேசவில்லை. அவருக்குப் பதிலாகக் காங்கிரஸ் எம்.பி கெளரவ் கோகாய் இந்த தீர்மானம் குறித்து முதலில் பேசினார்.
அதன் பிறகு பல்வேறு எம்பிக்களும் இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்துப் பேசினார். இதில் பேசிய தேசியவாத காங்கிரஸ் எம்பி சுப்ரியா சுலே, "மணிப்பூர் விவகாரத்தைப் பொறுத்தவரை.. இது அவர்களுக்கும் (மத்திய அரசுக்கும்) எங்களுக்கும் (எதிர்க்கட்சிகள்) இடையே நடக்கும் விஷயம் இல்லை. இது பெண்களின் கண்ணியம் தொடர்பானது.. இப்படிப்பட்ட ஆட்சியை எப்படித் தொடர அனுமதிக்க முடியும்.. மணிப்பூர் மாநிலத்தினது முதல்வர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்.
வழக்குகள்: மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை, கொலை, பலாத்காரம் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன.. நாம் இந்த அளவுக்கே உணர்ச்சியே இல்லாத நபர்களாக மாறிவிட்டோமா! இதுதான் இந்த அரசின் பிரச்சனை... அவர்கள் நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்கள்.
நாங்கள் (இந்தியா கூட்டணி எம்பிக்கள்) ஒரு இந்தியக் குடிமகனின் பிரதிநிதிகள். ஒரு எம்பி என்பவர் குடிமக்களின் குரலாகவே இருக்கிறார்.. இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் என்பது இந்திய மக்களின் உணர்வின் வெளிப்பாடுதான்.. ஒரு பிரச்சினையைக் கையாள்வதில் இந்த அரசின் அணுகுமுறை அபத்தமானது. அவர்கள் ஒவ்வொரு முறையும், எதிர்காலம் குறித்து மட்டுமே பேசுகிறார்கள். நிகழ் காலத்தில் நடக்கும் வன்முறை குறித்துப் பேசுவதில்லை.
9 அரசுகள் கவிழ்பு: ஆட்சிக்கு வரும் போது மக்களுக்கு நல்ல நாள் என்று சொன்னீர்கள். ஆனால், இப்போது அந்த நல்ல நாள் எங்கே போனது. மணிப்பூரில் என்ன ஆனது. இது மட்டுமா நாட்டில் விலைவாசி உச்சத்தில் இருக்கிறது. அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துவிட்டது. அத்தியாவசிய பொருட்கள் உச்சம் தொட்டுள்ளது. இதுதான் நீங்கள் கூறிய நல்ல நாளா.. இதுதான் பொதுமக்களுக்கு நீங்கள் தரும் நல்ல செய்தியா" என்று அவர் ஆவேசமாகப் பேசினார்.
மேலும், கடந்த 9 ஆண்டுகளில் பாஜக தேர்ந்தெடுக்கப்பட்ட 9 மாநில அரசுகளைக் கவிழ்ந்துள்ளதாகக் கூறி அந்த மாநிலங்களையும் சுலே பட்டியலிட்டார். அருணாச்சல பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், மேகாலயா, கர்நாடகா, கோவா, மத்தியப் பிரதேசம், புதுச்சேரி, மகாராஷ்டிராவில் இரண்டு முறை எனப் பல இடங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை பாஜக கவிழ்த்துள்ளது.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications