அண்ணாமலை “வார்னிங்”.. கேட்பாரா மோடி? தொடருமா அதிமுக கூட்டணி? 2024 தேர்தல் குறித்து நவம்பரில் ஆலோசனை
பாஜக கூட்டணி தொடர்பாக முடிவு செய்ய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை பாஜக அமைக்க தேசிய தலைமை முடிவு செய்து இருக்கிறது.
டெல்லி: 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி இடம்பெறும் கட்சிகள் குறித்து நவம்பர் மாதம் அக்கட்சித் தலைமை ஆலோசனை நடத்த இருக்கிறது. அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் பதவியிலிருந்து ராஜினாமா செய்வேன் என்று அண்ணாமலை அறிவித்த நிலையில் அவரது இந்த கூட்டம் முக்கியத்துவம் பெற்று உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சிப்பொறுப்பு ஏற்று இந்த ஆண்டுடன் 4 ஆண்டுகள் நிறைவடைய இருக்கும் நிலையில் வரும் 2024 ஆம் ஆண்டு மே மாதத்துடன் அரசின் பதவிக்காலமும் முடிவடைகிறது.
இந்த நிலையில் வரும் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெறும். அதில் வெற்றிபெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியில் அமரும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது பாரதிய ஜனதா கட்சி.

காங்கிரஸ் கூட்டணி
எதிர்க்கட்சியான காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக, திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், ஜார்க்கண்ட் முக்தி மோர்சா, சமாஜ்வாடி, பி.ஆர்.எஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளுடன் வலுவான கூட்டணியை அமைத்து வாக்குகளை சிதறவிடாமல் ஆட்சியமைக்க திட்டமிட்டு அதற்கான பணிகளை முழு வீச்சில் தொடங்கி இருக்கிறது.

பாஜக கூட்டணி
அதே சமயம் பாரதிய ஜனதா கட்சி கடந்த தேர்தலில் தங்கள் கூட்டணியில் இருந்த ஐக்கிய ஜனதா தளம் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, அகாலி தளம் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவை இழந்து இருக்கிறது. மீதம் உள்ள கட்சிகளையும், எந்த கூட்டணியிலும் இல்லாத ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சி, பிஜு ஜனதா தளம், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளையும் கூட்டணியில் சேர்க்க முனைப்பில் உள்ளது.

அதிமுக கூட்டணி
அத்துடன் முன்பு கூட்டணியில் இடம்பெற்ற அதிமுக உள்ளிட்ட கட்சிகளை தக்க வைக்க முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் 2024 தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி தொடரும் என்று அறிவித்தார். ஆனால், சமீப காலமாக இரு கட்சிகளிடையே மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது.

அண்ணாமலை எச்சரிக்கை
இந்த நிலையில்தான் 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டால் தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் பதவியில் இருந்து விலகுவேன் என்று எச்சரித்தார் அண்ணாமலை. இந்த நிலையில் பாஜக கூட்டணி தொடர்பாக முடிவு செய்ய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை பாஜக அமைக்க முடிவு செய்து இருக்கிறது.

மோடியுடன் ஆலோசனை
இந்த குழு மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை மேற்கொண்டு தொகுதி பங்கீட்டை இறுதி செய்த பிறகு, வரும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோருடன் ஆலோசித்து இறுதி முடிவை வெளியிடும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இதில் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications