Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"கைவிரித்த மத்திய அரசு.. இந்துக்களின் புனித தலமான கைலாச மலையை கூட காப்பாற்றல.." பாயும் சு வெங்கடேசன்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை நாடாளுமன்றத்தில் பேச விடாமல் தடுப்பதாக சிபிஎம் எம்பி சு. வெங்கடேசன் குற்றஞ்சாட்டினார். மேலும், இந்துக்களின் புனித பூமியையே பாஜகவால் காப்பாற்ற முடியவில்லை என்றும் கைலாய மலையைக் கூட காப்பாற்ற முடியாத நிலையில் தான் பாஜக இருக்கிறது என்றும் அவர் விமர்சித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தியை பேச அனுமதிக்கவில்லை என சொல்லி அமளியில் ஈடுபட்டனர். நேற்றைய தினமே ராகுல் காந்தி சீன விவகாரம் குறித்து பேச முயன்றார். இருப்பினும், அவரை பேச அனுமதிக்கவில்லை.

Su Venkatesan

சஸ்பெண்ட்

இன்றைய தினம் இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட்டது. அதை தொடர்ந்தே சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது தொடர்பாக சிபிஎம் எம்பி சு. வெங்கடேசன் மற்றும் காங்கிரஸின் மாணிக்கம் தாகூர் எம்பி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

சு. வெங்கடேசன்

இதற்கிடையே டெல்லியில் இருவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை நாடாளுமன்றத்தில் பேச விடாமல் தடுப்பதாகக் குற்றஞ்சாட்டினர். மேலும், சீன எல்லை விவகாரம் தொடர்பாகப் பேசிய சு. வெங்கடேசன், இந்துக்களின் புனிதப் பூமியையே பாஜகவால் காப்பாற்ற முடியவில்லை என்றும் கைலாய மாலையைக் கூட காப்பாற்ற முடியாத நிலையில் தான் பாஜக இருக்கிறது என்றும் சாடினார். மேலும், குறைந்தபட்சம் அங்கு என்ன நடந்தது என்பதை விவாதிக்கக் கூட அனுமதிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சு வெங்கடேசன், "இன்றைய தினம் போராட்டத்தில் இந்தியா கூட்டணி உள்ள அனைத்து கட்சிகளும் சேர்ந்தே போராடினார்கள். அதில் எங்கள் 8 எட்டு பேரை இடைநீக்கம் செய்துள்ளனர். நாளையும் நிச்சயம் வரிசையாக இடைநீக்கம் நடக்கும். எந்தவொரு விவகாரம் குறித்தும் விவாதிக்க கூடாது என்று ஆளும் தரப்பு முடிவெடுத்துள்ளது.. மாணிக்கம் தாகூர் குறிப்பிட்டதை போல கைலாச மலையில் சீன ராணுவம் மேலேறி வந்தது.

கைலாச மலை

கைலாஷ் என்பது இந்து மரபில் எவ்வளவு முக்கியமான இடம் என்பது அனைவருக்கும் தெரியும் தெரியும். அந்த மலையின் மீது மேலே இன்னொரு நாட்டு ராணுவம் மேலே ஏறி வந்தபோது தடுக்க முடியாமல் இருந்தவர்கள் தான் இவர்கள். ஆன்மீகத்தையே அரசியலாக வைத்திருக்கும் நீங்கள், புனித பூமியாக கருதப்படும் ஒரு கைலாச மலையிலேயே சீன ராணுவம் வந்ததை தடுக்காமல் இருந்துள்ளீர்கள்.

கைவிரித்த மத்திய அரசு

சுமார் 2 மணி நேரம் மௌனம் சாதித்து, அதற்கு பிறகு என்ன முடிவோ நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் என்று கைவிரித்துள்ளீர்கள். அது பற்றி ஒரு ராணுவ ஜெனரல் எழுதி இருக்கிறார். அந்த புத்தகத்தை நீங்கள் பரிசீலனை பண்ணுங்கள்.. உண்மையா என்று சொல்லுங்கள். ஆனால், அதை பற்றிய விவாதிக்கும் உரிமை அதில் என்ன நடந்தது என்பதை தெளிவுபடுத்த வேண்டிய உரிமை லோக்சபாவுக்கு இருக்கிறது.

இப்படி நடக்கவே இல்லை என்று கூட நீங்கள் சொல்லுங்க. எந்தவொரு விஷயமாக இருந்தாலும் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த தான் நாடாளுமன்றம் இருக்கிறது. என்ன நடந்தது என்பதை விவாதிக்கவே நாடாளுமன்றம் இருக்கிறது. இந்த விவகாரத்தில் இந்தியா கூட்டணி ஒற்றுமையாக இருந்து குரல் கொடுத்துள்ளோம்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+