"கைவிரித்த மத்திய அரசு.. இந்துக்களின் புனித தலமான கைலாச மலையை கூட காப்பாற்றல.." பாயும் சு வெங்கடேசன்
டெல்லி: எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை நாடாளுமன்றத்தில் பேச விடாமல் தடுப்பதாக சிபிஎம் எம்பி சு. வெங்கடேசன் குற்றஞ்சாட்டினார். மேலும், இந்துக்களின் புனித பூமியையே பாஜகவால் காப்பாற்ற முடியவில்லை என்றும் கைலாய மலையைக் கூட காப்பாற்ற முடியாத நிலையில் தான் பாஜக இருக்கிறது என்றும் அவர் விமர்சித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தியை பேச அனுமதிக்கவில்லை என சொல்லி அமளியில் ஈடுபட்டனர். நேற்றைய தினமே ராகுல் காந்தி சீன விவகாரம் குறித்து பேச முயன்றார். இருப்பினும், அவரை பேச அனுமதிக்கவில்லை.

சஸ்பெண்ட்
இன்றைய தினம் இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட்டது. அதை தொடர்ந்தே சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது தொடர்பாக சிபிஎம் எம்பி சு. வெங்கடேசன் மற்றும் காங்கிரஸின் மாணிக்கம் தாகூர் எம்பி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
சு. வெங்கடேசன்
இதற்கிடையே டெல்லியில் இருவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை நாடாளுமன்றத்தில் பேச விடாமல் தடுப்பதாகக் குற்றஞ்சாட்டினர். மேலும், சீன எல்லை விவகாரம் தொடர்பாகப் பேசிய சு. வெங்கடேசன், இந்துக்களின் புனிதப் பூமியையே பாஜகவால் காப்பாற்ற முடியவில்லை என்றும் கைலாய மாலையைக் கூட காப்பாற்ற முடியாத நிலையில் தான் பாஜக இருக்கிறது என்றும் சாடினார். மேலும், குறைந்தபட்சம் அங்கு என்ன நடந்தது என்பதை விவாதிக்கக் கூட அனுமதிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சு வெங்கடேசன், "இன்றைய தினம் போராட்டத்தில் இந்தியா கூட்டணி உள்ள அனைத்து கட்சிகளும் சேர்ந்தே போராடினார்கள். அதில் எங்கள் 8 எட்டு பேரை இடைநீக்கம் செய்துள்ளனர். நாளையும் நிச்சயம் வரிசையாக இடைநீக்கம் நடக்கும். எந்தவொரு விவகாரம் குறித்தும் விவாதிக்க கூடாது என்று ஆளும் தரப்பு முடிவெடுத்துள்ளது.. மாணிக்கம் தாகூர் குறிப்பிட்டதை போல கைலாச மலையில் சீன ராணுவம் மேலேறி வந்தது.
கைலாச மலை
கைலாஷ் என்பது இந்து மரபில் எவ்வளவு முக்கியமான இடம் என்பது அனைவருக்கும் தெரியும் தெரியும். அந்த மலையின் மீது மேலே இன்னொரு நாட்டு ராணுவம் மேலே ஏறி வந்தபோது தடுக்க முடியாமல் இருந்தவர்கள் தான் இவர்கள். ஆன்மீகத்தையே அரசியலாக வைத்திருக்கும் நீங்கள், புனித பூமியாக கருதப்படும் ஒரு கைலாச மலையிலேயே சீன ராணுவம் வந்ததை தடுக்காமல் இருந்துள்ளீர்கள்.
கைவிரித்த மத்திய அரசு
சுமார் 2 மணி நேரம் மௌனம் சாதித்து, அதற்கு பிறகு என்ன முடிவோ நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் என்று கைவிரித்துள்ளீர்கள். அது பற்றி ஒரு ராணுவ ஜெனரல் எழுதி இருக்கிறார். அந்த புத்தகத்தை நீங்கள் பரிசீலனை பண்ணுங்கள்.. உண்மையா என்று சொல்லுங்கள். ஆனால், அதை பற்றிய விவாதிக்கும் உரிமை அதில் என்ன நடந்தது என்பதை தெளிவுபடுத்த வேண்டிய உரிமை லோக்சபாவுக்கு இருக்கிறது.
இப்படி நடக்கவே இல்லை என்று கூட நீங்கள் சொல்லுங்க. எந்தவொரு விஷயமாக இருந்தாலும் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த தான் நாடாளுமன்றம் இருக்கிறது. என்ன நடந்தது என்பதை விவாதிக்கவே நாடாளுமன்றம் இருக்கிறது. இந்த விவகாரத்தில் இந்தியா கூட்டணி ஒற்றுமையாக இருந்து குரல் கொடுத்துள்ளோம்" என்றார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications