லோக்சபாவிற்கு நாளை பாஜக எம்பிக்கள் கட்டாயம் வரணும்.. திடீரென கொறடா உத்தரவு பிறப்பிப்பு! என்ன மேட்டர்
டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நடந்து வரும் நிலையில், நாளை தனது கட்சியின் அனைத்து எம்.பிக்களும் தவறாமல் அவை நடவடிக்கையில் கலந்து கொள்ள வேண்டும் என்று பாஜக கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 10 ஆம் தேதி தொடங்கியது. அடுத்த மாதம் 4 ஆம் தேதி வரை இந்தக் கூட்டத்தொடர் நடைபெறுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டவாது அமர்வு தொடங்கியதில் இருந்து எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

எதிர்க்கட்சி எம்பிக்களின் கேள்விகளுக்கு அமைச்சர்களும் பதிலளித்து வருகிறார்கள். கடும் அமளி, காரசார விவாதம் என அனல் பறக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே, தனது கட்சியின் அனைத்து எம்.பிக்களும் தவறாமல் அவை நடவடிக்கையில் கலந்து கொள்ள வேண்டும் என்று பாஜக கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதில், பட்ஜெட் மற்றும் அதன் மீதான மானிய கோரிக்கை ஆகியவை நாளை லோக்சபாவில் நிறைவேற்ற வேண்டியிருப்பதால் அனைத்து பாஜக எம்பிக்களும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications