மனைவியுடன் நடந்தது உறவா, பலாத்காரமா என நிரூபிப்பது கடினம்: பாஜக எம்.பி. பேச்சு! ஸ்மிருதி இராணி ஆதரவு
டெல்லி: நாட்டில் நடக்கும் திருமணத்தை வன்முறை என்று சொல்வதையும், ஆண்களை வன்புணர்வு செய்பவர்கள் என்று அறிவிப்பது நல்லதல்ல என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்துள்ளார்.
2022-23ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். அதன்பிறகு கேள்வி பதில் நேரம் தொடங்கியது.
அப்போது திருமண உறவில் நடக்கும் பாலியல் வன்முறை குறித்து கம்யூனிஸ்ட் எம்.பி பினோய் விஸ்வம் கேள்வி எழுப்பினார். மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி பதிலளித்தார்.

திருமணம்
இதையடுத்து, நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பி சுஷில் மோடி கூறுகையில், திருமண வன்புணர்வை குற்றமாக்குவது திருமண நிகழ்வுகளையே முடிவுக்குக் கொண்டுவந்துவிடும். திருமண உறவில் ஒரு மனைவி எப்போது சம்மதித்தாள், சம்மதிக்கவில்லை என்பதை நிரூபிப்பது கடினம்" என்று தெரிவித்தார். அதேநேரம், இதற்கு பதிலளித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர், நாட்டில் உள்ள ஒவ்வொரு மனிதனையும் கற்பழிப்பவர் என்று நான் ஒருபோதும் குறிப்பிடவில்லை என்று தெரிவித்தார்.

ஸ்மிருதி இரானி
இதற்கு ஸ்மிருதி இராணி பதிலளிக்கையில் ''திருமணத்தை வன்முறை என்றோ, மனைவியுடன் ஒவ்வொரு ஆண்களும் உடலுறவு கொள்வதை வன்புணர்வு என்றோ அறிவிப்பது நல்லதல்ல. நாட்டில் பெண்களுக்கு உதவி செய்ய முப்பதுக்கும் மேற்பட்ட ஹெல்ப் லைன் நம்பர்கள் செயல்பாட்டில் இருக்கின்றன. அதேநேரம், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பே மத்திய அரசின் முதன்மை" என்று அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்தார்.

பிரமாண பத்திரம்
கடந்த 2017-ம் ஆண்டு மத்திய அரசு டெல்லி உச்சநீதிமன்றத்தில், தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், ''திருமண பாலியல் வன்கொடுமை குறித்த எந்த ஒரு சட்டமும் வரையறுக்கபடவில்லை, மேற்கத்திய நாடுகளில் இது குற்றமென குறிப்பிடப்பட்டிருந்தாலும், இந்தியாவும் இதை கண்மூடித்தனமாக பின்பற்ற வேண்டிய அவசியமில்லை. இந்தச் சட்டத்தை ஆண்களுக்கு எதிராக உபயோகபடுத்தும் அபாயமுள்ளது" என கூறியிருந்தது. உயர் நீதிமன்றத்தில் அரசின் நிலைப்பாடு என்ன என்பதை தெரிவிக்குமாறு அமைச்சர் ஸ்மிருதி இராணியிடம் தெரிவித்தார் பிரதமர் மோடி, மேலும் தாம்பத்திய உறவை குற்றமாக கருதக்கூடாது என்பதே தனது அறிவுரை என்றும் கூறினார்.

நீதிமன்றம்
திருமணத்திற்குப் பின்பு கணவன், மனைவியின் அனுமதியின்றி கட்டாய உறவுகொள்வதை Marital rape ஆகக் கருதி அதை சட்டப்படி குற்றமாக்கும் வகையில் சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொள்வது பற்றி கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தனர். இது ஆண்கள் மத்தியில் கடும் சர்ச்சைக்கு உள்ளானது. இதையடுத்து சமூக வலைதளங்களில் திருமணத்தை புறக்கணிக்கும் #MarriageStrike என்ற ஹேஷ்டேக் ஆண்களால் டிரெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications