Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“மோடி..மோடி..மோடி..” மேஜையை தட்டி வரவேற்ற எம்.பி.கள்.. மாஸாக என்ட்ரி கொடுத்த பிரதமர் நரேந்திர மோடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி : 5 மாநில சட்டசபை தேர்தலில் 4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்று ஆட்சிமைக்கவுள்ள நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடருக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியை பாஜக எம்பிக்கள் "மோடி..மோடி..மோடி.." என முழக்கமிட்டு மேஜையை தட்டி வரவேற்றனர்.

Recommended Video

    சலாம் மோடிஜி... மக்களவையில் மேசையை தட்டி பிரதமருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்த பாஜக எம்பிக்கள்!

    உத்திரப் பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் நிறைவடைந்த நிலையில், பாஜக 4 மாநிலங்களிலும், பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியும் ஆட்சியை பிடித்துள்ளது.

    பஞ்சாப் தவிர மணிப்பூர், உத்தரகாண்ட், கோவா உள்ளிட்ட மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை பிடித்துள்ளது.

    பிப்ரவரி-மார்ச் மாதங்களில் நடைபெற்ற தேர்தல்களில், பாஜக உத்தரப் பிரதேசத்தில் ஒரு சாதனை வெற்றியை பெற்றது. குறிப்பாக கோவா, உத்தரகண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் கடுமையான போட்டி மற்றும் கருத்து கணிப்புகளை மீறி வெற்றி பெற்றது.

    தேர்தல் வெற்றி

    தேர்தல் வெற்றி

    உ.பி. சட்டசபை தேர்தலில் பாஜக பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட அதிக இடங்களில் வெற்றி பெற்று உபி முதல்வராக யோகி ஆதித்யநாத், மீண்டும் பொறுப்பேற்கவுள்ளார். தேசிய அரசியலை தீர்மானிக்கும் உத்தரப்பிரதேசம் ஒரு முக்கியமான மாநிலம் ஆகும். உத்திர பிரதேசத்தில் ஆளும் கட்சியே அடுத்ததாக மீண்டும் ஆட்சியமைத்ததாக 40 ஆண்டுகளில் வரலாறு இல்லை. அந்த வகையில் யோகி ஆதித்யநாத் மீண்டும் ஆட்சியை பிடித்து வரலாற்று வெற்றியை பெற்றுள்ளார்.

    பாஜகவினர் புகழாரம்

    பாஜகவினர் புகழாரம்

    உபி உள்ளிட்ட மாநிலங்களில் ஆட்சியை பிடித்ததற்கு பிரதமர் நரேந்திர மோடி தான் காரணம் என பாஜகவினர் புகழாரம் சூட்டி வருகின்றனர். குறிப்பாக வேலையில்லா திண்டாட்டம், பெண்களுக்கு எதிராக வன்கொடுமைகள், விவசாயிகள் பிரச்சினை ஆகியவற்றிற்கும் மேலாக பாஜக வெற்றி பெற்றதற்கு பிரதமரும், அவரது திட்டங்கள் தான் காரணம் என் யோகி ஆதித்யநாத் கூறியிருந்தார். இந்நிலையில் இன்று கூடிய பட்ஜெட் அமர்வில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்றம் வந்தார்.

    எம்பிக்கள் முழக்கம்

    எம்பிக்கள் முழக்கம்

    பிரதமர் மோடி லோக்சபாவில் தனது பாரம்பரிய இருக்கையில் அமர்ந்திருந்த நிலையில், சமீபத்திய மாநிலத் தேர்தல்களில் 5க்கும் 4 என்ற சிறந்த வெற்றியைக் குறிக்கும் வகையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடருக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியை பாஜக எம்பிக்கள் "மோடி..மோடி..மோடி.." என முழக்கமிட்டு மேஜையை தட்டி வரவேற்றனர். எம்பிக்கள் மட்டுமல்லாது மத்திய அமைச்சர்களான அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும் ஆளுங்கட்சி எம்.பி.க்களுடன் இணைந்து பெரும் வரவேற்பு அளித்தனர். அப்போது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் சபையில் இருந்தனர்.

    பிரதமர் நாளை உரை

    பிரதமர் நாளை உரை

    ஆஸ்திரியாவில் இருந்து நாடாளுமன்றக் குழுவைச் சேர்ந்த எம்பிக்கள் சபாநாயகர் ஓம் பிர்லாவின் இருக்கைக்கு அருகில் இருந்து இருந்து அவையின் இன்றைய நடவடிக்கைகளைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, ​​பிரதமர் மோடி மக்களவைக்குள் நுழைந்தார். அப்போதுதான் எம்பிக்கள் இவ்வாறு முழக்கமிட்டனர். முழக்கங்கள் ஓய்ந்த பிறகே, ​​நான்கு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ஆஸ்திரியக் குழுவை சபாநாயகர் வரவேற்றார். வாராந்திரக் கூட்டம் நாளை கூடும் போதும் பாஜகவின் ஆரவாரம் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் இரு அவைகளிலும் உள்ள கட்சி எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி பேசுவார் எனத் தெரிகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+