நெருங்கவே முடியாது! பாஜக ஜனாதிபதி வேட்பாளர் திரெளபதி முர்முவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு!
டெல்லி: பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் உள்ளார். இவரது பதவிக்காலம் ஜூலை 24ம் நிறைவு அடைகிறது. இதனால் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் 18ல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மேலும், ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. வேட்புமனுத்தாக்கலுக்கு ஜூன் 29 கடைசி நாளாகும்.

எதிர்க்கட்சி சார்பில் யஷ்வந்த் சின்கா
இந்த முறை மத்திய பாஜக அரசுக்கு குடைச்சல் கொடுக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் சார்பிலும் ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்கா ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட உள்ளார். பீகார் மாநிலத்தை சேர்ந்த இவர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். பிறகு ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்து அரசியலில் கால்பதித்தார். பாஜகவில் இணைந்து செயல்பட்டார். பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் மத்திய அமைச்சராக பணியாற்றினார். பிறகு அவர் பாஜகவில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டு வருகிறார்.

பாஜக வேட்பாளராக திரெளபதி முர்மு
இந்நிலையில் தான் இவரை எதிர்த்து தேசிய ஜனநாயக கூட்டணி (பாஜக) சார்பில் திரெளபதி முர்மு நேற்று அறிவிக்கப்பட்டுள்ளார். ஒடிசாவை சேர்ந்த இவர் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்தவர். இவர் ஜனாதிபதி தேர்தலில் திரெளபதி முர்மு வெற்றி பெற்றால் இந்தியாவின் முதல் பழங்குடியின பெண் ஜனாதிபதி என்ற சிறப்பை பெறுவார். இவர் பாஜகவில் அரசியல் பிரவேசம் செய்து கவுன்சிலர் முதல் மாநில அமைச்சர் வரை பதவி வகித்தார். அதன்பிறகு ஜார்க்கண்டின் முதல் பெண் ஆளுநராக இவர் நியமிக்கப்பட்டார். தற்போது

இசட் பிளஸ் பாதுகாப்பு
இந்நிலையில் தான் ஆளும் பாஜக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரெளபதி முர்முவுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 24 மணிநேரமும், துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் படையினரால்(சிஆர்பிஎப்) இசட்-பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு பணியில் 36 பேர்
இவர்கள் 24 மணிநேரமும் 3 சிப்ட்டாக திரெளபதி முர்முவுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளனர். மேலும் அவரது பயணங்களும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது 36 பேர் வரை அவரது பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
எச்.ராஜாவுக்கு ஆளுநர் பதவி? சென்னையில் உறுதி கொடுத்த பிரதமர் மோடி.. பாஜக மேலிடம் எடுத்த முடிவு! -
நம்மதான் ஜெயிக்கிறோம்.. கோவையில் செந்தில் பாலாஜி மாஸ் திட்டம்.. கூட்டணி கட்சியினருடன் ஆலோசனை -
தேர்தல் பரப்புரையில்.. துரந்தர், கேரளா ஸ்டோரி, காஷ்மீர் ஃபைல்ஸ் பற்றி பேசிய மோடி! கேரளாவில் சலசலப்பு -
விஜய் மனதில் பாஜக இருக்கிறது.. அடித்து சொல்லும் குஷ்பூ.. காரணம் தெரியுமா? -
Sellur Raju: பாஜகவுடன்தானே? பாகிஸ்தானுடனா கூட்டணி வைத்தோம்? ஆவேசமான செல்லூர் ராஜு! -
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கோயம்பேடு வா.. தாம்பரம் காதலியிடம் இருந்து வந்த அழைப்பு.. காதலனுக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
மகளிர் உரிமை தொகை ரூ.2 ஆயிரம், ரூ.8,000 கூப்பன் வாக்குறுதிகள் என்னை கவர்ந்தது.. நடிகை ரோகிணி! -
முதல் கூட்டத்திலேயே வானதிக்கு நோஸ் கட்.. கோவையில் ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக












Click it and Unblock the Notifications