நெருங்கவே முடியாது! பாஜக ஜனாதிபதி வேட்பாளர் திரெளபதி முர்முவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு!
டெல்லி: பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் உள்ளார். இவரது பதவிக்காலம் ஜூலை 24ம் நிறைவு அடைகிறது. இதனால் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் 18ல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மேலும், ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. வேட்புமனுத்தாக்கலுக்கு ஜூன் 29 கடைசி நாளாகும்.

எதிர்க்கட்சி சார்பில் யஷ்வந்த் சின்கா
இந்த முறை மத்திய பாஜக அரசுக்கு குடைச்சல் கொடுக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் சார்பிலும் ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்கா ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட உள்ளார். பீகார் மாநிலத்தை சேர்ந்த இவர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். பிறகு ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்து அரசியலில் கால்பதித்தார். பாஜகவில் இணைந்து செயல்பட்டார். பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் மத்திய அமைச்சராக பணியாற்றினார். பிறகு அவர் பாஜகவில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டு வருகிறார்.

பாஜக வேட்பாளராக திரெளபதி முர்மு
இந்நிலையில் தான் இவரை எதிர்த்து தேசிய ஜனநாயக கூட்டணி (பாஜக) சார்பில் திரெளபதி முர்மு நேற்று அறிவிக்கப்பட்டுள்ளார். ஒடிசாவை சேர்ந்த இவர் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்தவர். இவர் ஜனாதிபதி தேர்தலில் திரெளபதி முர்மு வெற்றி பெற்றால் இந்தியாவின் முதல் பழங்குடியின பெண் ஜனாதிபதி என்ற சிறப்பை பெறுவார். இவர் பாஜகவில் அரசியல் பிரவேசம் செய்து கவுன்சிலர் முதல் மாநில அமைச்சர் வரை பதவி வகித்தார். அதன்பிறகு ஜார்க்கண்டின் முதல் பெண் ஆளுநராக இவர் நியமிக்கப்பட்டார். தற்போது

இசட் பிளஸ் பாதுகாப்பு
இந்நிலையில் தான் ஆளும் பாஜக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரெளபதி முர்முவுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 24 மணிநேரமும், துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் படையினரால்(சிஆர்பிஎப்) இசட்-பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு பணியில் 36 பேர்
இவர்கள் 24 மணிநேரமும் 3 சிப்ட்டாக திரெளபதி முர்முவுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளனர். மேலும் அவரது பயணங்களும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது 36 பேர் வரை அவரது பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கச்சா எண்ணெய் விலை பேரல் 100 டாலர் தாண்டாத வரை.. பெட்ரோல், டீசல் விலை உயராது.. மத்திய அரசு விளக்கம்! -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications