Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நெருங்கவே முடியாது! பாஜக ஜனாதிபதி வேட்பாளர் திரெளபதி முர்முவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் உள்ளார். இவரது பதவிக்காலம் ஜூலை 24ம் நிறைவு அடைகிறது. இதனால் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் 18ல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேலும், ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. வேட்புமனுத்தாக்கலுக்கு ஜூன் 29 கடைசி நாளாகும்.

எதிர்க்கட்சி சார்பில் யஷ்வந்த் சின்கா

எதிர்க்கட்சி சார்பில் யஷ்வந்த் சின்கா

இந்த முறை மத்திய பாஜக அரசுக்கு குடைச்சல் கொடுக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் சார்பிலும் ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்கா ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட உள்ளார். பீகார் மாநிலத்தை சேர்ந்த இவர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். பிறகு ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்து அரசியலில் கால்பதித்தார். பாஜகவில் இணைந்து செயல்பட்டார். பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் மத்திய அமைச்சராக பணியாற்றினார். பிறகு அவர் பாஜகவில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டு வருகிறார்.

 பாஜக வேட்பாளராக திரெளபதி முர்மு

பாஜக வேட்பாளராக திரெளபதி முர்மு

இந்நிலையில் தான் இவரை எதிர்த்து தேசிய ஜனநாயக கூட்டணி (பாஜக) சார்பில் திரெளபதி முர்மு நேற்று அறிவிக்கப்பட்டுள்ளார். ஒடிசாவை சேர்ந்த இவர் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்தவர். இவர் ஜனாதிபதி தேர்தலில் திரெளபதி முர்மு வெற்றி பெற்றால் இந்தியாவின் முதல் பழங்குடியின பெண் ஜனாதிபதி என்ற சிறப்பை பெறுவார். இவர் பாஜகவில் அரசியல் பிரவேசம் செய்து கவுன்சிலர் முதல் மாநில அமைச்சர் வரை பதவி வகித்தார். அதன்பிறகு ஜார்க்கண்டின் முதல் பெண் ஆளுநராக இவர் நியமிக்கப்பட்டார். தற்போது

இசட் பிளஸ் பாதுகாப்பு

இசட் பிளஸ் பாதுகாப்பு

இந்நிலையில் தான் ஆளும் பாஜக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரெளபதி முர்முவுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 24 மணிநேரமும், துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் படையினரால்(சிஆர்பிஎப்) இசட்-பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு பணியில் 36 பேர்

பாதுகாப்பு பணியில் 36 பேர்

இவர்கள் 24 மணிநேரமும் 3 சிப்ட்டாக திரெளபதி முர்முவுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளனர். மேலும் அவரது பயணங்களும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது 36 பேர் வரை அவரது பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+