அதிருப்தி தலைவர்களிடம் பணிந்து போகும் பாஜக.. எல்லாம் 5 மாநில தேர்தல் கொடுத்த பாடம்
டெல்லி: அதிருப்தி தலைவர்களுடன் பாஜக சாஃப்ட்டாக போக ஆரம்பித்துள்ளது. இதுவரை கடைபிடித்து வந்த கடும் நிலைப்பாட்டை தளர்த்திக்கொள்ள கட்சி தலைமை முன் வந்துள்ளது.
கடந்த சில வருடங்களாகவே, அதிருப்தியாளர்களை கடுமையாகவே கையாண்டு வந்த பாஜக, இப்போது தனது நிலைப்பாட்டை தளர்த்தியுள்ளது. குஜராத் முன்னாள் உள்துறை அமை அமைச்சர் கோர்தன் ஜடாபியா 2012ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், நரேந்திர மோடியை எதிர்த்து போட்டியிட்டார். இருப்பினும், தோல்வியடைந்தார்.

இந்த நிலையில் கோர்தன் ஜடாபியாவை பாஜகவில் இணைத்துக்கொண்டுள்ள அதன் தலைமை, 2019ம் ஆண்டு, லோக்சபா தேர்தலுக்காக உத்தர பிரதேச பொறுப்பாளர்களில் ஒருவராக இவரை நியமித்துள்ளது. 2014ல் இவர் தனது குஜராத் பரிவர்த்தனா கட்சியை, பாஜகவுடன் இணைத்துக்கொண்டார்.
இதுவரை மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொண்டாலும் பதவிகள் தராமல் இருந்த பாஜக தலைமை இப்போது பதவியையும் தந்து தனது பெரிய தலைகளை கைக்குள் வைத்துக்கொள்ள முயற்சி செய்கிறது.
உத்தரபிரதேசம் போன்ற முக்கியமான ஒரு மாநிலத்தில் அதிருப்தி தலைவருக்கு பொறுப்பு வழங்கியுள்ளதை வைத்து பார்க்கும்போது பாஜக தலைமை தனது நிலைப்பாட்டை எந்த அளவுக்கு தளர்த்திக்கொண்டுள்ளது என்பதை அறிய முடியும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
இவர் மட்டுமல்ல, மேலும் பல அதிருப்தி தலைவர்களும், 17 மாநிலங்களில் லோக்சபா தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்பதும் கவனிக்கத்தக்கது. 5 மாநில தேர்தலுக்கு பிறகுதான் பாஜக நெகிழ்ச்சித் தன்மையில் இறங்கியுள்ளது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.












Click it and Unblock the Notifications