இது அமலாக்கத்துறை அல்ல... பாஜகவின் தேர்தல் மேலாண்மை துறை.. மத்திய அரசை கடுமையாக சாடிய காங்கிரஸ்
டெல்லி: மத்திய பாஜக அரசு அமலாக்கத்துறையை, தேர்தல் மேலாண்மை துறையாக பயன்படுத்துகிறது. ராகுல்காந்தியை பார்த்து பாஜக பயப்படுவதால் இத்தகைய செயலை செய்கிறது என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல்காந்தி அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு நேற்று ஆஜரானார். இதையொட்டி நேற்று நாடு தழுவிய அளவில் காங்கிரஸ் சார்பில் கடும் போராட்டம் நடத்தப்பட்டது.
இதையடுத்து டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மூத்த தலைவர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் கைது செய்தனர். மூத்த தலைவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.

2 வது நாள் ராகுல் ஆஜர்
இதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களாக கேசி வேணுகோபால், ப சிதம்பரம் உள்பட பலர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் தான் இன்று 2வது நாளாக ராகுல்காந்தி அமலாக்கத்துறை முன்பு ஆஜரானார். முன்னதாக அவர் தனது சகோதரி பிரியங்கா காந்தியுடன் டெல்லி காங்கிரஸ் அலுவலம் வந்து மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு ராகுல்காந்தி அங்கிருந்து புறப்பட்டு அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு சென்றார்.

போராட்டம் - கைது
இதையொட்டி நேற்று டெல்லி அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் முன்பு தலைவர்கள், தொண்டர்கள் குவிந்திருந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்களை போலீசார் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர். இதனால் அங்கு காங்கிரஸாருக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு பரபரப்பான சூழல் நிலவியது. இருப்பினும் போலீசார் அவர்களை குண்டுகட்டாக தூக்கிச்சென்று கைது சென்றனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ரன்தீப் சிங் சுர்ஜேவாலா உள்பட ஏராளமான தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இது அமலாக்கத்துறை அல்ல
முன்னதாக ரன்தீப் சிங் சுர்ஜேவாலா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கல்வான் பள்ளத்தாக்கு விவகாரம், பணவீக்கம், நாட்டின் வேலையில்லா திண்டாட்டம் போன்ற பிரச்னைகளை ராகுல் காந்தி எழுப்பி பிரதமர் மோடியின் அரசை எதிர்க்கிறார். இதனால் மத்திய அரசு கலக்கமடைந்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளாக அமலாக்கத்துறையை மத்திய பாஜக அரசு தேர்தல் மேலாண்மைத் துறையாக பயன்படுத்தி வருகிறது. அமலாக்கத்துறையின் பின்னால் இருந்து கொண்டு மத்திய அரசு எதிர்க்கட்சியின் குரலை முடக்குகிறது.

பாஜகவின் இலக்கு ஏன்?
இந்த வேளையில் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியை மட்டும் ஏன் பாஜக இலக்காக கொண்டுள்ளது? பொதுப் பிரச்சினைகளை எழுப்பும் குரல்களை நசுக்க சதி நடக்கிறதா? மோடி அரசுக்கு கிடைக்க வேண்டிய பலன்களுக்கு ராகுல்காந்தி தடையாக இருக்கிறாரா? என்ற கேள்விகள் எழுகின்றன. இதற்கு பதில் என்னவெனில் பெட்ரோல்-டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர், உணவு பொருட்கள் என எதுவாக இருந்தாலும் நாட்டின் நடுத்தர மக்கள், ஏழைகள் சந்திக்கும் பிரச்சனைகளின் குரலாக ராகுல் காந்தி உள்ளார்.

பயப்படும் மத்திய அரசு
கொரோனா தடுப்பூசிக்கு கட்டணம் நிர்ணயிப்பதன் மூலம் கோடிகளில் லாபம் ஈட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ராகுல் காந்தி குரல் எழுப்பியதால் தான் இலவச தடுப்பூசி வழங்க கோரினார். மேலும் சில தனியார் நிறுவனங்களின் தொழில்அதிபர்களுக்கு சாதகமாக பிரதமர் இருப்பதை ராகுல் காந்தி விமர்சித்தார். பிரான்சில் ரபேல் ஒப்பந்தம், இலங்கையில் மின்சார ஒப்பந்தத்தை தனியார் நிறுவனத்திற்கு வழங்குமாறு அழுத்தம் கொடுக்கிறார். இதனை ராகுல்காந்தி அம்பலப்படுத்தினார். ஒருங்கிணைந்த காங்கிரஸ், ஏழைகளின் குரலாக ராகுல்காந்தி இருப்பதால் அவரை பார்த்து மத்திய பாஜக அரசு பயப்படுகிறது'' என விமர்சனம் செய்துள்ளார்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications