‛ஓவைசி வீட்டில் கருப்பு மை வீச்சு’.. ‛ஜெய் பாலஸ்தீன்’ கோஷம் தான் காரணமா? டெல்லியில் பெரும் பரபரப்பு
டெல்லி: ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவரும், ஹைதராபாத் எம்பியுமான அசாதுதீன் ஓவைசியின் டெல்லி இல்லத்தின் மீது கருப்பு மை ஊற்றப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர் எம்பியாக பதவியேற்றபோது லோக்சபாவில் ‛ஜெய் பாலஸ்தீன்' என கோஷமிட்டது சர்ச்சையான நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவராக இருப்பவர் அசாதுதீன் ஓவைசி. இவர் கடந்த 2004 முதல் ஹைதரபாத் லோக்சபா தொகுதியின் எம்பியாக இருந்து வருகிறார்.

கடந்த 2004, 2009, 2014, 2019 ஆகிய ஆண்டுகளில் வெற்றி பெற்றிருந்த இவர் மீண்டும் சமீபத்தில் முடிந்த லோக்சபா தேர்தலில் மீண்டும் ஹைதரபாத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்த தேர்தலில் ஓவைசி 6,61,981 ஓட்டுகள் பெற்றார். இவரை எதிர்த்து களமிறங்கிய பாஜக வேட்பாளர் கொம்பெல்லா மாதவி லதா 3,23,894 ஓட்டுகள் பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் முகமது வாலிஉல்லா சமீர் வெறும் 62,962 ஓட்டுகள் மட்டுமே பெற்றார். இதன்மூலம் 3,38,087 ஓட்டுகள் வித்தியாசத்தில் ஓவைசி மீண்டும் வெற்றி பெற்றார். இதன்மூலம் அவர் ஹைதராபாத் தொகுதியில் இருந்து 5வது முறையாக எம்பியாகி இருக்கிறார்.
இந்நிலையில் தான் கடந்த 24ம் தேதி லோக்சபா கூட்டத்தொடர் தொடங்கியது. இதையடுத்து தேர்தலில் வெற்றி பெற்ற அனைவரும் எம்பிக்களாக பதவியேற்றனர். அசாதுதீன் ஓவைசியும் எம்பியாக பதவியேற்றார். இந்த வேளையில் அவர் ‛ஜெய் பாலஸ்தீன்' என்று முழங்கினார்.இது சர்ச்சையானது. இந்தியாவில் எம்பியாக தேர்வான நிலையில் இன்னொரு நாட்டுக்கு ஆதரவாக அவர் முழக்கமிட்டதால் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இத்தகைய சூழலில் தான் டெல்லியில் உள்ள அசாதுதீன் ஓவைசியின் வீடு மீது கருப்பு மை ஊற்றப்பட்டுள்ளது. அதாவது நேற்று இரவு அவரது வீட்டுக்கு சென்ற மர்மநபர்கள் கருப்பு மையை ஊற்றிவிட்டு சென்றுள்ளனர். அதாவது வீட்டின் முன்புறம் கதவின் அருகே அசாதுதீன் ஓவைசியின் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த பெயர் பலகையில் கருப்பு மை ஊற்றப்பட்டுள்ளது. இதுபற்றி தகவல் அறிந்தவுடன் டெல்லி போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் அசாதுதீன் ஓவைசியின் பெயர் பலகையில் ஊற்றப்பட்டு இருந்த கருப்பு மை அகற்றப்பட்டது. இதற்கு ஓவைசி மற்றும் அவரது கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஓவைசி மேடைகள் தோறும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர்களை கடுமையாக விமர்சனம் செய்து வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இந்நிலையில் தான் பாஜகவினர் மீது அவர்கள் சந்தேகம் அடைந்துள்ளனர். இருப்பினும் தற்போதைய சூழலில் அவரது வீட்டின் மீது யார் கருப்பு மை ஊற்றினார்கள்? என்பது தெரியவில்லை. இதுபற்றி போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications