Rahul Gandhi: சபாநாயகருக்கு நிர்பந்தம்! லோக்சாபா வரலாற்றில் இப்படி நடந்ததே கிடையாது.. ராகுல் காந்தி பரபர கடிதம்
டெல்லி: குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான உரையில் இன்று தன்னை பேசுவதற்கு அனுமதிக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ள ராகுல் காந்தி, இது தொடர்பாக சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், லோக்சபாவில் இன்று நடைபெற்றது ஜனநாயகத்தின் மீதான கறை என்றும் காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.
இது தீவிரமான கவலையை அளிக்கிறது. இது முன்னெப்போதும் இல்லாத நடைமுறை. எதிர்க்கட்சி தலைவரை உரையாற்ற விடாமல் தடுக்கப்படுவதற்கு சபாநாயகர் நிர்பந்திக்கப்பட்டுள்ளார் என்றும் ராகுல் காந்தி கடிதத்தில் கூறியுள்ளார்.

அனுமதி பெற்று பேச வேண்டும்
லோக்சபாவில் குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் விவாதம் மக்களவையில் 2-வது நாளாக இன்று நடைபெற்றது. அவை கூடியதும் விவாதத்தில் பங்கேற்று பேசிய ராகுல் காந்தி, ''சீன ஆக்கிரமிப்பு தொடர்பாக ராணுவ முன்னாள் தளபதி தெரிவித்த கருத்துகளை தெரிவிக்க முடியாமல் நான் தடுக்கப்பட்டேன்.
நரவனேவின் சுயசரிதை தொடர்பான அந்த கட்டுரையில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதை நான் உறுதிப்படுத்தி உள்ளேன். அது பாதுகாப்பு தொடர்பானது'' என கூறினார். ராகுல் காந்தியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, சபாநாயகரின் அனுமதி பெற்று ராகுல் காந்தி இது குறித்து பேச வேண்டும் என வலியுறுத்தினார்.
நான் எதிர்க்கட்சி தலைவர்
அதற்கு ராகுல் காந்தி, ''நான் இந்தியாவின் எதிர்க்கட்சி தலைவர். யாருடைய அனுமதியும் எனக்கு தேவை இல்லை'' என்றார். அதற்கு கிரண் ரிஜிஜு, ''யாராக இருந்தாலும் சபாநாயகரிடம் அனுமதி பெற்றே பேசுகிறார்கள். சபாநாயகரின் அனுமதி இன்றி யாரும் பேசுவது இல்லை'' என குறிப்பிட்டார். ராகுல் காந்தியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த சபாநாயகர் ஓம் பிர்லா, ''உறுதி படுத்தப்படாத ஆவணங்களை சுட்டிக்காட்டி நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்த சட்ட விதிகளில் இடம் இல்லை.
எனவே, அது குறித்து நீங்கள் பேசக்கூடாது. ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் அளவில் உங்கள் பேச்சு இருப்பதை உறுதிப்படுத்துங்கள்'' என தெரிவித்தார். இதை ஏற்க மறுத்த ராகுல் காந்தி, ''ஜனாதிபதி உரையில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு முக்கிய விஷயம் தேசிய பாதுகாப்பு பற்றியது. பாகிஸ்தான், சீனாவுடன் இந்தியாவுக்கு இருக்கும் உறவு பாதுகாப்பு தொடர்பானதே.
ஓம் பிர்லாவுக்கு ராகுல் கடிதம்
இந்த கட்டுரையில் மிக முக்கிய விஷயம் உள்ளது. அது பிரதமரின் எதிர்வினையை பற்றி பேசுகிறது'' என்றார். இந்த விவகாரத்தால் லோக்சபாவில் அமளி ஏற்பட்டது. இதற்கிடையே, லோக்சபாவில் பேச அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக ராகுல் காந்தி எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
ஆளும் கட்சி கூறியதற்காக எதிர்க்கட்சி தலைவர் பேசுவதை தடுக்கும் சூழல் உருவாகியுள்ளது. பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களை நான் பேசக்கூடாது என்பதற்காக திட்டமிட்டு எதிர்க்கின்றனர். நான் இன்று அவையில் பேசும் போது, நான் சுட்டிக்காட்டி பேச இருந்த இதழ் கட்டுரையின் உண்மைத்தன்மையை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தினார்.
மரபுகளை மீறும் செயல்
நீண்ட காலமாக உள்ள மரபு மற்றும் இதற்கு முந்தைய சபாநாயகர்கள் கடைபிடித்த விதிகள் என்னவென்றால், ஒரு அவையில் ஒரு ஆவணத்தைக் குறிப்பிட விரும்பும் உறுப்பினரே , அதைச் சரிபார்த்து, அதில் உள்ள கருத்துகளுக்கு பொறுப்பேற்க வேண்டும். இந்த நடைமுறையை நான் முறையாகப் பின்பற்றினேன்.
இதன்பிறகு உறுப்பினரை பேச சபாநாயகர் அனுமதிப்பார். அரசு இதற்கு பதிலளிக்க வேண்டும். சபாநாயகரின் பங்கு அத்துடன் முடிந்து விடுகிறது. லோக்சபாவில் என்னை பேசவிடாமல் தடுத்தது மரபுகளை மீறும் செயல் மட்டுமின்றி, தேசிய பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் எதிர்க்கட்சி தலைவராக நான் பேசுவதை தடுப்பதற்கு நடைபெற்ற திட்டமிட்ட முயற்சியாகும்.
சபாநாயகர் நிர்பந்திக்கப்பட்டுள்ளார்
இது தீவிரமான கவலையை அளிக்கிறது. இது முன்னெப்போதும் இல்லாத நடைமுறையாகும். இந்த அடிப்படை ஜனநாயாக உரிமைகளை மறுப்பது முன்னெப்போதும் இல்லாத ஒரு சூழலை உருவாக்கியுள்ளது. நாடாளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக அரசின் உத்தரவுக்கு இணங்கி, எதிர்க்கட்சி தலைவரை உரையாற்ற விடாமல் தடுக்கப்படுவதற்கு சபாநாயகர் நிர்பந்திக்கப்பட்டுள்ளார்" என்று கூறியுள்ளார்.
-
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
“காங்கிரஸின் அணுகுமுறை.. ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை சிதைக்கிறது” - திருமாவளவன் அதிருப்தி! -
காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் அறிவிப்பு.. சிட்டிங் சீட்களில் 2-ஐ விட்டுக் கொடுத்தது காங்! -
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
அறிவாலயம் vs சத்தியமூர்த்தி பவன்.. ராகுல் மீது கடும் கோபத்தில் ஸ்டாலின்.. வெடித்தது யுத்தம்? -
காங்கிரசில் 60 ஆண்டு உறுப்பினர்! தவெகவில் 96 வயது மூதாட்டி.. விஜய்யை சந்தித்து கட்சியில் ஐக்கியம் -
கேப்பில் கால் பதிக்கும் பாஜக! கேரளாவில் இடதுசாரிகள் vs காங்கிரஸ் கடும் போட்டி! புதிய சர்வே முடிவுகள் -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன்












Click it and Unblock the Notifications