கொங்கு நாட்டுக்கு சூப்பர் திட்டம்.. சேலம் டூ கொச்சி சாலையில் 2 மேம்பாலங்கள்! திருப்பூர் எம்பி தகவல்
டெல்லி: சேலம் - கொச்சி இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளை தடுப்பதற்கு மேம்பாலங்கள், சர்வீஸ் சாலைகள் அமைக்கப்பட உள்ளதாக திருப்பூர் இந்திய கம்யூனிஸ்டு எம்பி சுப்பராயன் தெரிவித்து இருக்கிறார்.
திருப்பூர் மக்களவைத் தொகுதி இந்திய கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினரான சுப்பராயன் தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையரகமான NHAI வின் தலைவர் சந்தோஷ் குமார் தலைநகர் டெல்லியில் சந்தித்தது மேம்பாலம், சர்வீஸ் சாலைகள் அமைப்பது தொடர்பாக கோரிக்கை வைத்தார்.

சேலம் - கோச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெருந்துறை புறவழிச் சாலையில் விபத்துகளை தடுக்க பெருந்துறை - காஞ்சிக்கோயில் சாலை, துடுப்பதி சாலை, வாய்பாடி சாலை, பெத்தாம்பாளையம் சாலை, விஜயமங்கலம் சாலை ஆகிய இணைப்பு சாலைகளில் மேம்பாலம் மற்றும் சர்வீஸ் சாலைகளை அமைக்க கோரினார்.
அதேபோல மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து இதற்கு உடனடியாக ஒப்புதல் அளித்து நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை விரைவாக தொடங்க வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், "விபத்துகளைத் தடுப்பதற்காக சேலம் - கொச்சி தேசிய நெடுஞ்சாலையில், பெருந்துறை புறவழிச் சாலையில் பெத்தாம்பாளையம் சாலை, பெருந்துறை - காஞ்சிக்கோயில் சாலை, துடுப்பதி சாலை, விஜயமங்கலம், வாய்பாடி சாலை ஆகிய இணைப்புச் சாலைகளின் சந்திப்புகளில் மேம்பாலங்கள் மற்றும் சா்வீஸ் சாலைகள் அமைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இந்த நிலையில் ரூ.70.82 கோடி மதிப்பில் துடுப்பதி சாலை மற்றும் காஞ்சிக்கோயில் சாலை சந்திப்புகளில் 2 மேம்பாலங்கள் அமைக்கவும், விஜயமங்கலம் - வாய்பாடி சாலை, பெத்தாம்பாளையம் சாலை பகுதிகளில் சா்வீஸ் சாலைகள் அமைக்கவும் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளன.
இதற்கான முன்மொழிவுகள் இறுதி ஒப்புதலுக்காக, டெல்லியில் உள்ள தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்தின் தலைமை அலுவலகத்தில் நிலுவையில் உள்ளது. இந்த திட்டத்துக்கு விரைவில் ஒப்புதல் அளித்த, நிதி ஒதுக்கீடு செய்து பணிகளைத் தொடங்க வலியுறுத்தி மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரியையும் அண்மையில் சந்தித்து வலியுறுத்தியுள்ளேன்." என அவர் தெரிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications